சுகாதாரமற்ற நிலை.. நோயாளிகளிடம் மோசமான நடத்தை.. ஆர்.எம்.ஓவை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு வரும் நோயாளிகளிடம் மோசமாக நடந்து கொண்டதாக வந்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரியை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனை வட சென்னையில் உள்ள முக்கியமான மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை ஆகும். சென்னையில் உள்ள முக்கியமான மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று.

இங்கு மகப்பேறு பிரிவிற்கான பிரத்யேமாக பல்வேறு வசதிகள் உள்ளன. இதனால் வடசென்னை மக்கள் பிரசவத்திற்கு இங்கு தான் பிரதானமாக வருகிறார்கள். தினமும் ஏராளமான பெண்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

லஞ்சம்

லஞ்சம்

இந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் நோயாளிகளிடம் மோசமாக நடந்து கொள்வதாகவும், லஞ்சம் கேட்டு வற்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன. அண்மையில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் மோதல்களும் நடந்தன. பணம் இல்லாமல் எதுவும் நடக்காது என்கிற அளவிற்கு ஊழியர்கள் சிலர் நடந்து கொண்டதாக புகார்கள் பறந்தன. ஒவ்வொரு விஷயத்திற்கு ஒரு ரேட் என்கிற அடிப்படையில் பணம் கேட்டு வற்புறுத்துவதாகவும், சுகாதார சீட்கேடுடன் மருத்துவமனை இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

 மா. சுப்பிரமணியன்

மா. சுப்பிரமணியன்

இதையடுத்து ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு இன்று திடீரென சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அங்கு ஆய்வு மேற்கொண்டு , அதிகாரிகளிடமும், பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். அத்துடன் அங்கிருந்த நோயாளிகளிடம் விசாரணை நடத்தினார்.

விளக்கம்

விளக்கம்

இறுதியாக மருத்துவமனையை சுற்றிபார்த்த அமைச்சர் மா சுப்பிரமணியன், சரியான பராமரிப்பின்றியும் சுகாதார சீர்கேடு அடைந்து காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் வெங்கடேஸ்வரி அவர்களிடம் விளக்கம் கேட்டார்.

அதிரடி

அதிரடி

இதனிடையே சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதனிடையே மருத்துவமனையை சரியாக பராமரிக்காமலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதற்கான புகார்களை நோயாளிகள் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் மா சுப்பிரமணியன் உடனடியாக மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரியை தற்காலிக பணிநீக்கம் செய்ய மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+