பிப்.1 முதல் ஆன்லைனில் கல்லூரி செமஸ்டர் தேர்வு! உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
சென்னை: பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்த பிறகு இந்த முடிவை அவர் அறிவித்திருக்கிறார்.
முறைகேடுகளுக்கு இடம் அளிக்காத வகையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

பிப்ரவரி 1
பிப்ரவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அரசு கலைக் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே நேரடியாக தேர்வு நடத்தப்படும் என அவர் கூறியிருக்கிறார். ஆசிரியர் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் கலந்துபேசிய பிறகு இதனை அறிவித்தார் அமைச்சர் பொன்முடி.

விடைத்தாள்கள்
பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே வினாக்கள் கேட்கப்படும் என்றும் எவ்வித முறைகேடுகளும் நிகழாத வண்ணம் ஆன்லைனில் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவு அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். கிராமப்புறங்களில் மாணவர்கள் அப்லோடு செய்யும் விடைத்தாள்கள் மோசமான இணையத்தொடர்பால் வந்து சேர தாமதமானாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் கூறியிருக்கிறார்.

நேரடித் தேர்வுகள்
கொரோனா பரவல் காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் கல்வித்தரத்தை பொறுத்தவரை சமரசமின்றி உயர்க்கல்வித்துறை செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். நிறைய மாணவர்கள் நன்றாக படிக்கக் கூடியவர்களாக இருந்தும் கொரோனா பேட்ஜா எனக் கேட்டு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக தனக்கு வரும் புகார்களின் அடிப்படையிலேயே இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

மாணவர்கள் மகிழ்ச்சி
இதனிடையே ஆன்லைனில் கல்லூரி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். ஏற்கனவே பல இடங்களில் ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி போராட்டங்கள் எல்லாம் கூட அவர்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications