பிப்.1 முதல் ஆன்லைனில் கல்லூரி செமஸ்டர் தேர்வு! உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
சென்னை: பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்த பிறகு இந்த முடிவை அவர் அறிவித்திருக்கிறார்.
முறைகேடுகளுக்கு இடம் அளிக்காத வகையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

பிப்ரவரி 1
பிப்ரவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அரசு கலைக் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே நேரடியாக தேர்வு நடத்தப்படும் என அவர் கூறியிருக்கிறார். ஆசிரியர் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் கலந்துபேசிய பிறகு இதனை அறிவித்தார் அமைச்சர் பொன்முடி.

விடைத்தாள்கள்
பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே வினாக்கள் கேட்கப்படும் என்றும் எவ்வித முறைகேடுகளும் நிகழாத வண்ணம் ஆன்லைனில் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவு அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். கிராமப்புறங்களில் மாணவர்கள் அப்லோடு செய்யும் விடைத்தாள்கள் மோசமான இணையத்தொடர்பால் வந்து சேர தாமதமானாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் கூறியிருக்கிறார்.

நேரடித் தேர்வுகள்
கொரோனா பரவல் காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் கல்வித்தரத்தை பொறுத்தவரை சமரசமின்றி உயர்க்கல்வித்துறை செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். நிறைய மாணவர்கள் நன்றாக படிக்கக் கூடியவர்களாக இருந்தும் கொரோனா பேட்ஜா எனக் கேட்டு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக தனக்கு வரும் புகார்களின் அடிப்படையிலேயே இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

மாணவர்கள் மகிழ்ச்சி
இதனிடையே ஆன்லைனில் கல்லூரி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். ஏற்கனவே பல இடங்களில் ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி போராட்டங்கள் எல்லாம் கூட அவர்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications