"புது நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல்.." வந்து விழுந்த கேள்வி.. இரண்டே வரியில் பதிலளித்த சேகர்பாபு
சென்னை: நாடாளுமன்றத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாட்டின் கோயில் என்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தைத் தான் குறிப்பிடுவார்கள். அதன்படி நமது நாட்டில் மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்ட நாடாளுமன்றம் டெல்லியில் செயல்பட்டு வருகிறது.

இப்போது நமது நாட்டில் இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. இங்கே இடவசதி போதுமானதாக இல்லை உள்ளிட்ட பல புகார்கள் இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது முன்வைக்கப்பட்டது.
இதற்கிடையே மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்யப்பட்டது. பழைய கட்டிடத்தை இடிக்காமல் அதற்கு அருகே புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காகக் கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கொரோனா காலத்திலும் இதற்கு மட்டும் சிறப்பு அனுமதி வாங்கி கட்டிட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. திட்டமிட்ட காலத்திற்குள் நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
நாடாளுமன்ற கட்டிடம்:
ஏற்கனவே, சாவர்க்கர் பிறந்த நாளில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இதுபோக நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்கக் கூடாது என்றும் குடியரசுத் தலைவரே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் சுமார் 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவையே புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் மக்களவை தலைவரின் இருக்கைக்கு அருகே வரலாற்றுச் சிறப்பு மிக்க சோழர் கால மாதிரி செங்கோல் நிறுவப்படும் என்று சமீபத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார். இது நாடு சுதந்திரம் அடைந்த போது, தமிழர்களைச் சேர்ந்த ஆதீனத்தால் வழங்கப்பட்டது. இதைத்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவ முடிவு செய்துள்ளனர்.
சேகர்பாபு:
இதற்கிடையே இது குறித்து அமைச்சர் சேகர்பாபு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-2024 நிதியாண்டின் அறிவித்தபடி ஆவடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கோணம்பேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இந்தப் பணிகள் அடுத்த 3 மாதங்களில் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, "கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இருந்தே உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடு மத்திய அரசுடனான விஷயங்களில் இயங்கி வருகிறோம்... சமீபத்தில் ஆளுநருடன் ஏற்பட்ட சர்ச்சையின் போதும் முதல்வர் இதைத்தான் தெளிவாகக் கூறியிருந்தார்.

தமிழ்நாட்டில் செய்யப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழர் கலாச்சாரம் பிரதிபலிப்பது பெருமைக்குரியது. அதேநேரம் நாடாளுமன்ற கட்டிடத்தைக் குடியரசுத் தலைவர் தான் திறக்க வேண்டும். இது தான் திமுகவின் நிலைப்பாடு.. குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதே ஏற்புடையதாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications