உற்சாகப்பானத்திற்கு பதில் ஊட்டச்சத்து பானம்! வீரபாண்டியார் அறிவித்ததை பரிசீலிப்போம் -தங்கம் தென்னரசு
சென்னை: முந்திரி பழத்திலிருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் முந்திரி விளைச்சலுக்கு பெயர்பெற்ற பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதனைக் கூறினார்.
மேலும், கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் முந்திரி பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை தொடர்பாக அப்போதைய வேளாண்மைத்துறை அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டசபை
தமிழக சட்டசபையில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் மின்சாரத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது தென் ஆப்ரிக்காவை போல் தமிழகத்திலும் முந்திரி பழத்திலிருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.

திமுக ஆட்சிக்காலம்
மேலும், கடந்த 2006 -2011 திமுக ஆட்சிக்காலத்தில் இதே கோரிக்கையை தாம் முன் வைத்ததன் காரணமாக சிறப்பு குழு ஒன்றை கோவாவுக்கு அனுப்பி அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதியும், அப்போதைய வேளாண்மைத்துறை அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகமும் ஆய்வு செய்ய வைத்தார்கள் எனவும் பழைய நிகழ்வுகளை சுட்டிக்காட்டினார் வேல்முருகன்.

முந்திரி பழங்கள்
கோவாவில் மது தயாரிப்புக்காக முந்திரி பழங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் நாம் அது போல் செய்யாமல் தென் ஆப்ரிக்காவை போல் முந்திரி பழங்களில் இருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கலாமே என்ற யோசனையையும் அளித்தார். இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உற்சாகப்பானத்திற்கு இல்லாவிட்டாலும் ஊட்டச்சத்து பானம் தயாரிக்கவாவது தொழிற்சாலை அமைக்கக்கோரும் வேல்முருகனின் கோரிக்கையை பரிசிலீத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மறைந்த அமைச்சர்
மேலும், மறைந்த அமைச்சர் வீரபாண்டி அறுமுகம் இது தொடர்பாக 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் வெளியிட்ட அறிவிப்பையும், அவர் முன்னெடுத்த பணிகளையும் கவனத்தில் கொண்டு முந்திரி பழத்திலிருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பது பற்றி வணிக ரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications