சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா! 23ஆம் புலிகேசி! பிரதமர் மோடியை வடிவேலுவுடன் ஒப்பிட்ட உதயநிதி!
சென்னை: சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா என்றும் வைகைப்புயல் வடிவேலுவின் 23-ஆம் புலிகேசி' கதாபாத்திரத்தோடு போட்டிபோட்டு பிரதமர் மோடி நகைச்சுவை செய்து கொண்டுள்ளார் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ள உதயநிதி, சில கேள்விகளையும் முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

'''சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா' என திரைப்பட நடிகர் அண்ணன் வடிவேலு அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம் போட்டி போடும் அளவுக்கு மோடி அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார். இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது... என வடிவேலு அண்ணனின் 23-ஆம் புலிகேசி' கதாபாத்திரத்தோடு போட்டிபோட்டு நகைச்சுவை செய்துகொண்டுள்ளார்.
திரையில் வடிவேலு அண்ணனை ரசிக்க முடிந்தது. நிஜத்தில் இவர்களை... மக்களின் வாக்குகளைப் பெற எந்தளவுக்கும் சென்று, இவர்கள் நாடக அரசியலைச் செய்வார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
நான் இதை நகைச்சுவைக்காக மட்டும் சொல்லவில்லை, ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்தும் 'புதுமைப்பெண்' திட்டம் போன்றோ, முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் போன்றோ, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றோ ஏதாவது ஒரு முற்போக்குத் திட்டம் கடந்த 9 ஆண்டுகால ஒன்றிய அரசிடம் இருந்து வந்திருக்கிறதா? மதுரை எய்ம்ஸை கட்டினார்களா? கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் போன்று ஏதாவது அறிவியக்கத்தை முன்னெடுத்தார்களா?''












Click it and Unblock the Notifications