தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்த செய்தி உண்மையா? அமைச்சர் விஜயபாஸ்கர் தரும் விளக்கம் என்ன?
சென்னை: தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்த செய்தி உண்மையா என்ற கேள்விக்கு அது தவறு என்று அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுடன் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அமைச்சரும், சுகாதாரத் துறை செயலாளரும் செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் செல்கிறார். இது எங்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது.

தமிழகம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் பாராட்டினார். சஞ்சீவனி திட்டம் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் 35 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளார்கள். தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளார்கள் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிறது.

செய்தி தவறு
இது போன்ற பொய்த் தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். அனைத்து தகவல்களையும் தமிழக அரசு வெளிப்படையாக தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் பலியானதாக கூறும் செய்தி தவறானது. இது குறித்து ஆய்வு செய்து எத்தனை பேர் என்பதை அறிவிப்போம்.

தமிழகத்தில் பலி
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பலி எண்ணிக்கையும் குறைந்தும் டெஸ்டிங் எண்ணிக்கை அதிகரித்தும் உள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார். நோயால் பாதிக்கப்படும் எண்ணிக்கையை குறைத்து காட்ட வேண்டும் என்றால் சோதனையை குறைக்கலாம். ஆனால் நாங்கள் அதிகரித்து வருகிறோம்.

மருந்து
தமிழகத்தில் இந்த கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் Tocilizumab, remdesvir, enoxaprin மருந்துகளை மருந்து நிறுவனங்கள் தனியாருக்கு அதிகவிலைக்கு விற்கக் கூடாது. ஒரு வேளை மீறி விற்பனை செய்தால் மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications