தன்னிகரற்ற கலைஞன் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது... ஸ்டாலின் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: இனிய நண்பரும் தன்னிகரற்ற கலைஞனுமாகிய நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து:

இன்றும் என்றும் இனிய நண்பரும் - தமிழ்த்திரையுலகில் தன்னிகரற்ற கலைஞனுமாகிய ரஜினிகாந்த் அவர்களுக்கு, 'தாதா சாகேப் பால்கே விருது' கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
எப்போதோ அவருக்கு இந்த விருது தரப்பட்டிருக்க வேண்டும். தாமதமாகத் தரப்பட்டுள்ளது.

நடிப்பில் மட்டுமல்ல நட்பிலும் இலக்கணமான ரஜினி அவர்களை வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்!
அவரது கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடரட்டும். தமிழ்த்திரை, நண்பர் ரஜினி அவர்களால் செழிக்கட்டும்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications