தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் வர 37.51% பேர் விருப்பம் - புதிய தலைமுறை சர்வே
சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் வர 37.51% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய சர்வே முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு 28.33% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் புதிய தலைமுறை கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சிக்கு வர உள்ளார்கள் என்பது குறித்து கருத்துகணிப்புகளை நடத்தியிருந்தது. அந்த கணிப்புகள் ஒவ்வொன்றையும் வரிசையாக வெளியிட்டு வருகிறது,
திமுக ஆட்சி
புதிய தலைமுறை கேட்ட முக்கியமான கேள்விகளில் ஒன்றான உங்கள் தொகுதியில் பலமுனை போட்டி ஏற்பட்டால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு 38.51% பேர் திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு
இதேபோல் தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் வர 37.51% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய சர்வே முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் முதல்வராக வர தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 28.33% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்
மக்கள் நீதி மய்யம் தலைவர்
தமிழகத்தின் அடுத்த முதல்வராக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வர 6.45% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என புதிய தலைமுறை சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் இந்த ஆதரவை தெரிவித்துள்ளனர்
நாம் தமிழர் கட்சி
தமிழகத்தின் அடுத்த முதல்வராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரலாம் என 4.93% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என புதிய தலைமுறை சர்வே முடிவுகளில் தெரியவந்துள்ளது. சீமான் இரண்டாவது முறையாக தனித்து சட்டசபை தேர்லை களம் காண்கிறார்.