வேற வழியே இல்லை.. அரசியல் அழுத்தம் இருக்கத்தான் செய்யும்.. பொன் மாணிக்கவேல் குறித்து கமல்
கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கமல் கூறியுள்ளார்.
சென்னை: 'வேறு வழியே இல்லை. நேர்மையாக இருப்பவர்களுக்கு அரசியல் அழுத்தம் எப்போதுமே இருந்துகொண்டுதான் இருக்கும்" என்று பொன்.மாணிக்கவேல் குறித்த கேள்விக்கு கமல் பதிலளித்து உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திரைப்பட தயாரிப்பு சங்கத்தில் நடக்கும் பிரச்னை, பொன். மாணிக்கவேல் மீதான புகார் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுவுக்கு நெருக்கடிகள் தரப்படுகிறதே என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.

உண்மை எந்த பக்கம்?
அதற்கு, "யார் சொல்வது நியாயம் என்பதை புரிந்து கொள்ள நேரம் தேவைப்படுகிறது. நேர்மை எந்த பக்கம் இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். ஒரு கருத்து கூறப்பட்டால் உடனே நாம் அந்த பக்கம் போக முடியாது.

வேற வழியே இல்லை
உண்மை என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். பொன்.மாணிக்கவேல் தனக்கு அரசு அழுத்தம் தருவதாக கூறியிருக்கிறார்.நேர்மையானவர்களுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுவது உண்மை தான். ஆனால் அதனை எதிர்கொண்டு தான் பணியாற்ற வேண்டும். வேறு வழியே இல்லை. இதைக் கடந்துதான் நேர்மையாக பணியாற்ற வேண்டும்' என்று பதிலளித்தார்.

ஆரம்ப விழா
பின்னர், 'விஜய்சேதுபதி நடித்த சீதக்காதி படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதுடன், கருத்து சுதந்திரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக உணருகிறீர்களா?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு கமல், "கருத்துச் சுதந்திரப் பிரச்சினை எனது படத்தில் தான் ஆரம்ப விழா நடத்தப்பட்டது என்று வருத்தப்பட்டுக் கொள்கிறேன்.

கருத்து சுதந்திரம்
படம் வெளியான பிறகு, அதைப் பார்த்துவிட்டுதான் கருத்து தெரிவிக்க வேண்டும். அதனால் என்ன பிரச்சினை, எதை சரியாகச் சொல்லவில்லை என்று சொன்னால் அது முறையானதாக இருக்கும். ஆனால் படம் வெளியாகும் முன்பே தடை என்று கேட்டால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவது இப்போது அதிகரித்து விட்டது. இது தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே இருக்கிறது என்று கமல் தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications