Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூடுபனி+கனமழை.. 8 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் நாளை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது.

வெள்ளம்: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை ஏற்படுத்திய பாதிப்புகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்த டிசம்பர் மாதம் தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் வட தமிழகத்திற்கு மிக அதிக மழையை கொடுத்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. சென்னை நகர் பகுதியில் ஒரு சில இடங்களில் இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் வடிய மூன்று நாட்கள் வரை ஆனது. புறநகர் பகுதிகளில் இந்த வெள்ளம் வடிய ஒரு வாரம் வரை ஆனது.

Moderate rain likely in 8 districts of Tamil Nadu in next 3 hours

கனமழை: அதேபோல தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த மாவட்டங்கள் மீண்டு வருவதற்கும் ஒரு சில நாட்கள் ஆகின. இந்நிலையில், இந்த வரும் 10ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரம்: அதேபோல, அடுத்த மூன்று மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நாளையை தினத்தை பொறுத்த அளவில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது சில இடங்களில் மூடுபனி இருக்கும் எனவும் எச்சரித்திருக்கிறது.

பருவமழை எப்படி இருந்தது?: தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு பருவமழைதான் முதலில் மழையை கொண்டு வரும். அதேபோல கடந்த ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் மழை செழிப்பாக தொடங்கியது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல மழையின் அளவு போதுமானதாக இருக்கவில்லை. தமிழ்நாட்டில் ஓரளவு இயல்பாக பெய்தாலும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்த மழை காலை வாரிவிட்டது. மழை குறைந்ததால் கேரளாவில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

அண்டை மாநிலங்கள்: கர்நாடகாவின் நீர் பிடிப்புகளில் மழை குறைந்ததால், கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைக்கு நீர் வரத்து குறைந்தது. எனவே மேட்டூருக்கு குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீரை நம்பி, டெல்டா மாவட்ட விவசாயிகள் காத்திருந்த நிலையில், கர்நாடகா போதுமான நீரை திறக்காதது பெரும் ஏமாற்றமளித்தது. இப்படியாக தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்தது. இதனையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

வடகிழக்கு பருவமழை: அக்டோபரில் தொடங்கிய இந்த மழை, தாராளமாக பெய்தது. தமிழ்நாட்டில் மேட்டூர் தவிர மற்ற அனைத்து அணைகளும் அதன் முழு கொள்ளவை எட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+