எடப்பாடி பழனிசாமியை பெரிய தலைவராக மோடி, அமித்ஷா மதிக்கவில்லை.. ரவீந்திரன் துரைசாமி பேட்டி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பெரிய தலைவராக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மதிக்கவில்லை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறினார்.
அண்ணாமலையை காமராஜர் மாதிரி ஒரு வலிமையான தலைவராக வளர்க்க டெல்லி தலைமை நினைக்கிறது.. எடப்பாடி பழனிச்சாமியோ தன்னை ஜெயலலிதா போல் நினைத்துக் கொண்டு அண்ணாமலையிடம் பேச மாட்டோம்.. மேலிடத்தில் தான் பேசுவோம் என்று அண்ணாமலைக்கு எதிராக வதந்திகளை பரப்புனாங்க என்று ரவீந்திரன் துரைசாமி கூறினார்,
அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ஒன் இந்தியா அரசியல் சேனலுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது நெறியாளர் கௌதமன் பேசுகையில், அமித்ஷா சென்னை வந்து சென்றது அரசியல் அரங்கில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாமலையை மிகவும் புகழ்ந்து அமித்ஷா பேசினார். என்னுடைய தம்பி அண்ணாமலை, கிராமம் வரைக்கும் கட்சியை கொண்டு போய் சேர்த்திருக்குறாரு.. கட்சி வளர்ந்திருக்கு என்று சொன்னார். அண்ணாமலை தற்போது பேசி வருவது குறித்து நீங்கள் (ரவீந்திரன்) பேசும் போது, டெல்லி உத்தரவு இல்லாமல் இப்படி அண்ணாமலை பேசமாட்டாரு என்றே கூறினீர்கள்.. அமித்ஷாவின் ஆசீர்வாதத்தில் தான் அண்ணாமலை இவ்வளவு நாளாக இதை செய்து கொண்டிருந்தாரா என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ரவீந்திரன் துரைசாமி, "நிச்சயமாக .. அண்ணாமலை ஐபிஎஸ் முடித்தவர்.. மனிதர்களை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்தவர். அவர் மோடி, அமித்ஷாவின் எண்ண ஓட்டத்திற்கு தகுந்தாற்போல் தான் செயல்பாடுகிறார் என்பது கணிப்பாக உள்ளது. அதனால் தான் அமித்ஷாவின் கருத்தை அண்ணாமலை கூறுகிறார் என்று நான் சொன்னேன். காமராஜர், மூப்பனார் பெயரை பயன்படுத்தி அண்ணாமலையை அமித்ஷா புகழ்கிறார் என்றால், இவர் எங்க ஆளு, இவரை வைத்து நாங்கள் பாஜகவை தமிழ்நாட்டில் வளர்க்க போகிறோம் என்பது தான்.
2004ல் தென் சென்னை தொகுதியில் இல கணேசனுக்கு சீட் கொடுக்கவிடாமல் ஜெயலலிதா செய்தார். அன்றைக்கு புதுக்கோட்டையில் திருநாவுக்கரசுக்கு சீட் தரவிடவில்லை. அந்த அளவிற்கு பாஜக மீது ஜெயலலிதா ஆளுமை செலுத்தினார். எடப்பாடி ஓபிஎஸ் ஆகிய இரட்டை தலைமையில் 2019ல் 39க்கு 38 தொகுதியில் பிளாப் ஆன சூழ்நிலையில், பன்னீரும் இப்போது கூட இல்லை.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னை இப்போது ஜெயலலிதா போல் நினைத்துக் கொண்டு, அண்ணாமலையிடம் நாங்கள் பேசமாட்டோம், மேலிடத்தில் தான் நாங்கள் பேசுவோம் என்று கூறியதுடன், திட்டமிட்டு அண்ணாமலைக்கு எதிராக வதந்திகளை பரப்பினாங்க.. அண்ணாமலையை நீக்க போறாங்க என்று கட்டுக்கதையை பரப்புனாங்க.. எந்த வகையிலுமே நடைமுறைக்கு பொருந்தாத விஷயத்தை அதிமுக தரப்பில் பரப்பிக்கொண்டு இருந்தாங்க.. ஆனால் அமித்ஷாவோ அண்ணாமலையை புகழ்ந்து வலுவான தலைவர், முக்கியமான தலைவர் என்பதை நேற்று முன்தினம் தனது பேச்சின் மூலம் உறுதி செய்திருக்கிறார் என்று ரவீந்திரன் கூறினார்.
மேலும் 2019ம்ஆண்டு தேர்தலில் கிடைத்த வாக்கு சதவீதத்தை விவரித்த ரவீந்திரன், ஜெயலலிதாவிடம் இருந்து 44 சதவீதம் வாக்கில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 17 சதவீதமும் , நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதிமய்யம், அமமுக ஆகியவற்றுக்கு சேர்த்து 13 சதவீதம் வாக்கு சதவீதம் பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறினார். 15 சதவீதம் வாக்குகள் பிரதமர் மோடி மற்றும் பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு வந்ததாக கூறினார். இரட்டை தலைமையாக இருந்த போது தான் இந்த வாக்கு சதவீதமும் கிடைத்தது, ஒற்றை தலைமையாக இருந்தால் இதுவும் கிடைக்காது. மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்காளர்களை ஓட்டாக மாற்றும் திறன் போதிய அளவு இல்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பெரிய தலைவராக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மதிக்கவில்லை என்றும் கூறினார். முழு வீடியோவை பாருங்கள்.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications