மயிலாப்பூரில் பரபரப்பு.. விடிய விடிய தூங்காமல் தவித்த சிட்டி சென்டர் மக்கள்.. ஆவேச மறியல்
சென்னை மயிலாப்பூர் மக்கள் மறியல் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்
சென்னை: மயிலாப்பூர் சிட்டி சென்டரில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டதால், பொதுமக்கள் நடவடிக்கை கோரி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் கடந்த 3 நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது.. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.. வீடுகளுக்குள்ளும் மழை தண்ணீர் புகுந்துவிட்டதால், அவைகளை அகற்ற குடியிருப்பு மக்கள் போராடி வருகிறார்கள்..
குறிப்பாக, வடசென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாகவே தூங்காமல் விடிய விடிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்..

அதிருப்தி
சிலர் தங்கள் உடைமைகளை அப்படி அப்படியே விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்கிறார்கள். மற்றொருபுறம், மாநகராட்சி ஊழியர்கள், கடந்த 3 நாட்களாகவே மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாழ்வான தெருக்கள், சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற மட்டுமே, மாநகராட்சி சார்பில் அலுவலர்கள், பணியாளர்கள் என மொத்தம் 23 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள்
எனினும் பல இடங்களில், நிவாரண மற்றும் மீட்பு பணிக்கான கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.. அந்த வகையில் மயிலாப்பூர் பகுதியும் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.. இங்குள்ள வி.சி. கார்டன் பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டது.. மேலும் சாலைகளிலும் மழை நீர் தேங்கி நின்றது..

அவதி
இதனால் பாதிப்படைந்த அந்த பகுதி மக்கள், உ டனடியாக அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் அவர்கள் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் திடீரென நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த தகவலறிந்த அபிராமபுரம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானம் பேசிவிட்டு சென்றனர்..

மறியல்
ஆனாலும் சிட்டி சென்டர் பகுதியில் மழைவெள்ள பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது.. இதனால், அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துவிட்டது.. இதனால் இரவெல்லாம் தூங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.. இன்று காலையிலும் அதிகாரிகள் வந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால், சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்... இதையடுத்து, சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications