மாணவர்களை இடைநிற்றலுக்கு தள்ள சதித்திட்டம்...! தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்
Recommended Video
சென்னை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை கொண்டுவந்திருப்பது மாணவர்களை இடைநிற்றலுக்கு தள்ளி வெளியேற்றும் சதித்திட்டம் என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், இது கண்டனத்திற்குரியது எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழக அரசு பொதுத்தேர்வு முறையை அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். மத்திய அரசின் புதியக் கல்விக்கொள்கையை ஏற்க தமிழக அரசு தயாராகிவிட்டதையே இது காட்டுவதாக கூறியுள்ளார்.
பாடச்சுமையை மாணவனின் தோளில் ஏற்றாத, தேர்வு பயத்தை உருவாக்காத, மதிப்பெண்னை கொண்டு அறிவை எடைபோடாத தனித்திறன் முறை கல்வி என்றும், பின்லாந்தும், தென்கொரியாவும் கல்வியில் முதன்மை நாடுகளாக திகழ்வதற்கு அந்த நாடுகளில் மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும்வகையில் கல்வி முறைகள் இருப்பதே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் அடிப்படை வசதிகளையும், உட்கட்டமைப்புகளையும் உருவாக்க முனையாத தமிழக அரசு, வெறுமனே தேர்வின் மூலம் மாணவர்களை தரப்படுத்த எண்ணுவது மிகப்பெரும் மோசடி என சாடியுள்ளார். பக்குவம் அடையாத வயதில் பொதுத்தேர்வை வைப்பது, மாணவர்களை பீதியடைச்செய்து அவர்களை இடைநிற்றலுக்கு தள்ளும் என எச்சரித்துள்ளார்.
குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வு முறையை திரும்பபெறவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்












Click it and Unblock the Notifications