நாய் கறி பேச்சு.. நான் ஏன் ஒப்பிட்டேன் தெரியுமா.. ஆர்எஸ் பாரதி கொடுத்த விளக்கம்
சென்னை: நாகாலாந்து மக்கள் நாய் கறி சாப்பிடுவது குறித்து ஆர்எஸ் பாரதி சர்ச்சையாக பேசியதாக ஆளுநர் ரவி குற்றம்சாட்டி வீடியோவும் வெளியிட்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த கருத்திற்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல தமிழ் செய்தி ஊடகத்திற்கு நாகாலாந்து நாய் கறி சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், "தமிழ்நாடு கவர்னர் ரவி அவர்கள், டுவிட்டரில் எனக்கு பதில் சொல்கிற வகையில் அல்லது அறிவுரை சொல்கிற வகையில் ஒரு ட்விட்டர் செய்தி போட்டிருக்கிறார். தமிழில் நான் பேசியதால், முதலில் கவர்னருக்கு நாம் பேசிய முழு பேச்சையும் தமிழிலே மொழிப்பெயர்த்து அதற்கு பிறகு ட்விட்டரில் செய்தி வெளியிட்டிருக்க வேண்டும்.

இருந்தாலும் அவர் வெளியிட்டுவிட்ட காரணத்தினால், நானும் ட்விட்டரிலே அவருக்கு பதில் அளித்துவிட்டேன்.. இன்றைய தினம் ஆளுநர் கொடுத்துள்ள செய்தி, தமிழ்நாட்டில் எடுபடாது.. வடமாநிலத்தில் உள்ளவர்களிடம் திராவிட முன்னேற்ற கழகம் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு, பிரதமர் மோடியில் இருந்து அனைவரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் பேசியதை வைத்து கொஞ்ச நாட்கள் காலம் ஓட்டினார்கள்.. இப்போது நான் பேசியதை மாற்றி கவர்னர் ரவி பரப்புகிறார்.. இவர் கவர்னராக நாகாலாந்தில் இருந்தவர்.. இவர் ஏன் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டார் என்பது பல பேருக்கு தெரியவில்லை.. அதை எடுத்து சொல்வதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்..
2019இல் இருந்து 2021 வரை நாகாலாந்தின் கவர்னராக ரவி அவர்கள் இருந்தார். 2020ல் இவர் ஒரு சட்டத்தை நிறைவேற்றுகிறார். அதாவது நாகாலாந்து மக்கள் நாய்கறி சாப்பிடக்கூடாது என்று ஒரு சட்டத்தை கொண்டு வருகிறார். அந்த சட்டதை கொண்டு வந்ததால் தான், அங்குள்ள நாகாலாந்து மக்கள் எல்லாம் கிளர்ந்து எழுந்தார்கள். இது தான் கவர்னர் ரவியை நாகலாந்தில் இருந்து விரட்டுவதற்கு ஒரு காரணமாக இருந்தது. ஆகவே அன்றைக்கு அந்த சட்டத்தை நிறைவேற்றிவிட்டு, 2021ல் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
இதனிடையே கவர்னர் ரவி போட்ட சட்டத்திற்கு எதிராக நாகாலாந்து மக்களில் ஒருவர், கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அவர் நாய்கறி வியாபாரம் செய்கின்ற ஒரு வியாபாரி ஆவார். நாய் இறைச்சி கடை வைத்திருக்கும் அவர், என் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு நடைபெற்று 2023 ஜூன் 8ம் தேதி கவுகாத்தி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பிலே நாகாலாந்து மக்களுக்கு நாய்கறி சாப்பிடுவது என்பது அவர்களின் கலாச்சாரத்துடன் பின்ணிப்பிணைந்த ஒன்று. ஆகவே அதற்கு தடை விதிக்க முடியாது என்று ரவி ஆட்சி காலத்தில் போடப்பட்ட சட்டத்தை ரத்து செய்து கவுகாத்தி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..
உண்மை நிலவரம் இப்படி இருக்க, அவர்களுக்காக இவர் கண்ணீர் வடிப்பது போல் நீலி வேசம் போடுகிறார். இதை நாகாலாந்து மக்கள் நம்ப மாட்டார்கள்.. யாரும் நம்ப மாட்டார்கள்.. ஆளுநர் எனது பேச்சை முழுமையாக கேட்ட வேண்டும். அப்போது தான் ஏன் ஒப்பிட்டேன் என்பதை புரிந்து கொள்ள முடியும்" இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications