ஐந்து வயது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய போலீசார்.. குவியும் பாராட்டு
சென்னை: ஐந்து வயது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு சென்னை நந்தம்பாக்கம் போலீசார் உதவியிருப்பது தெரியவந்துள்ளது. போலீசாரின் மனித நேய செயலை பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் சென்னையில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் பணியாற்றி வருகிறார்.
கார்த்திக்கின் இரண்டாவது மகள் கவிஷ்கா(5). இவருக்கு அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தையை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மருத்துவர்கள் தகவல்
அங்கு குழந்தை கவிஷ்காவுக்கு உடனே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். அதற்கு ரூ.5 லட்சம் வேண்டும் என்று கூறினர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கார்த்திக்கின் பொருளாதார நிலை மோசமாகி இருந்தது. இந்த சூழலில் மகளை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் கலங்கி நின்றார்.

உதவிய ஏட்டு செந்தில்குமார்
இந்நிலையில் கார்த்திக்கின் வீட்டின் அருகே சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றும்செந்தில் குமார் வசித்து வருகிறார். குழந்தை கவிஷ்கா அடிக்கடி போலீஸ் ஏட்டு செந்தில்குமாரின் வீட்டுக்கு சென்று வந்தால், அந்த குடும்பத்தில ஒருவராக மாறியிருந்தாள். கவிஷ்கா மீது செந்தில்குமார் அளவற்ற பாசம் வைத்திருந்தார்.

நிதி திரட்டப்பட்டது
குழந்தையின் நிலையை அறிந்த ஏட்டு செந்தில்குமார் தன்னால் முடிந்த 30 ஆயிரம் ரூபாயை கொடுத்து அறுவை சிகிச்சைக்கு செல்லுமாறு கார்த்தியிடம் அறிவுறுத்தினார்.அத்துடன் நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜிடம் குழந்தை கவிஷ்காவின் நிலையை பற்றி கூறினார். உடனே நந்தம்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த அனைத்து காவலர்களும் தங்களால் இயன்ற 45 ஆயிரம் பணத்தை திரட்டி கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தனக்கு தெரிந்த தன்னார்வ அமைப்பாளர்களிடம் இருந்து நிதி திரட்டி கொடுத்தார்.

குழந்தை நலமுடன் திரும்பினார்
நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் ஏட்டு செந்தில்குமார் உள்பட அந்த காவல் நிலையத்தின் அனைத்து போலீசாரின் உதவியால் சிறுமி கவிஷ்காவுக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. சிகிச்சை முடிந்து சிறுமி நலமுடன் வீடு திரும்பினார். போலீசாரின் இந்த மனித நேய செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications