கொலைகள் செய்தாலும் அகோரி சாமியார்கள் அரசியல் சாசனத்துக்கு மேலானவர்களா? என்ன சொல்கிறது அகண்டா சினிமா?
சென்னை: எத்தனை கொலைகள் செய்தாலும் அகோரி சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; சிவபெருமானாகவே வாழும் அகோரி சாமியார்கள் அரசியல் சட்டத்துக்கும் மேலானவர்கள் என்பதை நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ள அகண்டா திரைப்படம் வலியுறுத்துவது விவாதப் பொருளாகி இருக்கிறது.
நந்தமூரி பாலகிருஷ்ணன் நடித்த அகண்டா திரைப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்து வசூலில் கொடி கட்டிப் பறக்கிறது. இத்திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியானது.
அகண்டா திரைப்படத்தில் இரு வேடங்களில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். 2-வது பாகத்தில் அகோரி சாமியாராக படுமூர்க்கமான கதாபாத்திரத்தில் வலம் வருகிறார் பாலகிருஷ்ணா.

யார் அகோரிகள்?
அகோரிகள் குறித்த புரிதல்கள் இன்னமும் நமது நாட்டில் விவாதிக்கப்பட்டுதான் வருகிறது. அகோரிகள் என்பவர்கள் குடும்ப உறவுகளை வெறுத்து ஆன்மீகப் பாதைக்கு சென்றவர்கள். காசி, இமயமலை என கடும் உறைபனி இடங்களில் தவமிருப்பவர்கள். இவர்களே அகோரிகள் என அழைக்கப்படுகின்றனர். இந்து சாமியார்கள் அல்லது அகோரிகள் பல்லாயிரக்கணக்கில் நாடு முழுவதும் பரவிக் கிடக்கின்றனர். இவர்களின் வாழ்விடம் என்பது வெளிப்படையானது அல்ல.

அகாடாக்களும் ஹரித்வாரும்
ஆனால் அகோரிகளை ஒருங்கிணைக்கக் கூடிய அகாடாக்கள் அல்லது அகாராக்கள் ஏராளமாக உள்ளன. 10க்கும் மேற்பட்ட பொது அகாடாக்கள் உள்ளன. இந்த அகாடாக்கள் கீழ்தான் அத்தனை அகோரி சாமியார்களும் வருவர். அகாடாக்கள் அனைத்துக்குமே ஹரித்வார் புனித நகரில் சொந்தமான தலைமை நிலையங்கள் உள்ளன. பெரும்பாலான அகாடாக்கள் ஏசி வசதிகளுடன் கூடிய சொகுசு கட்டமைப்பு கொண்டவை. குஜராத்தின் கிர்நார், காசி உள்ளிட்ட பல இடங்களிலும் அகாடாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போதை பொருட்கள், கொலைகள்
இந்த அகாடாக்களில் அல்லது அகோரி சாமியார்கள் ஒன்று கூடும் கும்பமேளாக்களில் போதை வஸ்துகள் இயல்பாக புழங்கக் கூடும். இந்த அகாடாக்களைச் சேர்ந்த சாமியார்கள்தான் கும்பமேளா காலங்களில் நிர்வாண ஊர்வலங்கள் நடத்துவர். பல ஆண்டுகளாக கும்பமேளா காலத்து நிர்வாண ஊர்வலங்களில் எந்த அகாடாவை சேர்ந்தவர் முதல் முன்னுரிமை பெறுவது என்பதில் பெரும் மோதலே நடக்கும். ஹரித்துவாரில் 100க்கும் மேற்பட்ட அகோரிகள் தங்களுக்கு இடையே அடித்துக் கொண்டு மாண்ட வரலாறும் உண்டு. ஆனால் போதை வஸ்துகளுக்காகவோ, கொலைகளுக்காகவோ அகாடாக்கள் மீது அகோரிகள் மீது நடவடிக்கைகள் பாய்ந்தது இல்லை.

அகோரிகள் கொலை செய்யலாம்?
இருப்பினும் அகோரிகள், அகாடாக்கள் எந்த சட்டங்களின் கீழ் வருவர் என்பது புரியாத புதிர். ஏனெனில் அகோரி சாமியார்கள் தாங்களே சிவன் என்கிற சித்தாந்த்தைக் கொண்டவர்கள். நாங்கள் இந்த அரசியல் சட்டங்களுக்குட்பட்டவர்கள் அல்ல என்பது அகோரிகளின் நிலைப்பாடு. இதனையே நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அகண்டா திரைப்படத்தின் இறுதியில் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. பல நூறு பேரை அடித்து கொலை செய்யும் பாலகிருஷ்ணா, சிவனாக அவதரித்தே தாம் நியாயத்தை நிலைநிறுத்த கொலை செய்தேன்; அது உங்கள் சட்டத்தின் கீழ் வராது என பலமுறை அழுத்தம் திருத்தமாக சொல்வார். அதாவது அகோரிகளின் நடவடிக்கைகள் இந்த தேசத்தின் அரசியல் சட்டத்துக்கும் அப்பாற்பட்டது என்கிற ஒரு கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கிறது அகண்டா சினிமா. இதுதான் இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications