நீட்டுக்கு செட்டான தமிழக மாணவர்கள்.. கடந்த ஆண்டைக்காட்டிலும் 9.1% அதிகம் தேர்ச்சியடைந்து அசத்தல்!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிகளவு மாணவர்கள் தேர்தசி பெற்று அசத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
நீட் தேர்வுக்கான வினாத்தாள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்தே தயாரிக்கப்படுவதால் தமிழக மாணவர்களால் அதனை எதிர்கொள்ள முடியவில்லை என தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

அனிதா மரணம்
எதிர்க்கட்சிகளும் நீட்டுக்கு எதிராக களத்தில் குதித்தன. நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் உயிரை விட்டார் அரியலூர் மாணவி அனிதா. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீட் எழுதினால்தான் மருத்துவம்
இருப்பினும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவப்படிப்பு சாத்தியம் என்ற நிலை உருவானதால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள தொடங்கினர். கடந்த ஆண்டும் தமிழகத்தில் உயிர் பலி வாங்கியது நீட் தேர்வு.

கடந்த ஆண்டு 39.56%
கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 39.56 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் நாடு முழுவதுமான மாநில வாரியான பட்டியலில் தமிழகம் 35வது இடத்தை மட்டுமே பெற்றது

இந்த ஆண்டு 48.57% தேர்ச்சி
இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

9.1 சதவீதம் அதிகமாகும்
தமிழகத்தில் முதல் முறையாக அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 9.1 சதவீதம் அதிகமாகும்.

வினாத்தாள் எளிமையாக இருந்தது
இந்த ஆண்டு நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வுக்கு பின் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான வினாத்தாள் எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

எதிர்பார்க்கப்பட்ட முடிவு
உயிரியல் எளிமையாகவும், வேதியியல் மிதமாகவும், இயற்பியல் மட்டுமே சற்று கடினமாகவும் இருந்தது என மாணவ மாணவிகள் தெரிவித்திருந்தனர். இதனால் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

நீட்டுக்கு செட்டாகிய மாணவர்கள்
அதைப்போலவே இந்த ஆண்டு நீட் தேர்ச்சி விகிதம் முதல் முறையாக 48.57 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆண்டு தோறும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பெறும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவது தமிழக மாணவர்கள் மெல்ல மெல்ல நீட் தேர்வுக்கு செட்டாகிவிட்டதையே காட்டுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications