மக்களே.. நெக்ஸ்ட் ரவுண்டுக்கு ரெடியா.. நவம்பர் 16ம் தேதி உருவாகுகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அதிகாலை நாகையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து உள்ள நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நவம்பர் 16 ஆம் தேதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நவம்பர் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கி இருக்கிறது. கடந்த புதன்கிழமை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து கடந்த வியாழக்கிழமை அன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் அது நிலை கொண்டது.

தொடர் மழை
இதனால் தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 20க்கும் அதிகமான மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

தாழ்வு மண்டலம்
காற்றழுத்து தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், அது நாகப்பட்டினம் - அதிராம்பட்டினம் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்துக்கும் அதிகமாக விடாமல் மழை பெய்தது.

டெல்டா மாவட்டங்கள்
குறிப்பாக அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தீவிர கனமழை பொழிந்துள்ளது. 43 சென்டி மீட்டர் அளவுக்கு பெய்த பலத்த கனமழையால் விவசாய நிலங்கள், வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன. அதேபோல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.

கரையை கடந்த தாழ்வு மண்டலம்
மேலும் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் மழையின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இதற்கிடையே வரும் நவம்பர் 16 ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடகடலோர பகுதிகளில் நிலைகொண்டு இருக்கும் நிலையில், உள் மாவட்டங்கள், கேரளா, வழியாக மேற்கு - வடமேற்கு திசையில் அரபிக்கடலுக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications