2024 பாஜக ரிட்டர்ன் வந்தால்.. நிதிஷ் முடிவால்.. இங்கே அதிமுகவிற்கு சிக்கல்.. வேறு வழியே இல்லையாமே!
சென்னை: தேசிய அளவில் பாஜக கூட்டணி மீண்டும் வலிமை அடைய தொடங்கி உள்ளது. பீகாரில் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வருவார் என்ற தகவல்கள் வருவதால் அதிமுகவிற்கு பிரஷர் அதிகரித்துள்ளது.
அதிமுக - பாஜக மோதல் காரணமாக அவர்கள் கூட்டணி முறிந்துள்ளது. 2024 லோக்சபா, 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து தனியாக போட்டியிடும் என்று என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்தோம். கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு சிஏஏவை ஆதரித்தோம். வேறு வழியில்லாமல் சிஏஏவை ஆதரித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அதேபோல் இஸ்லாமியர்களை கவரும் விதமாக பல விஷயங்களை அவர் பேசி வருகிறார். பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என்பது போல பேசி வருகிறார்.
கூட்டணி முறிவு: பெரும் விவாதம், மோதலுக்கு பின்பே .. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது.
இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.
பீகாரில் கூட்டணி: இந்த நிலையில்தான் தேசிய அளவில் பாஜக கூட்டணி மீண்டும் வலிமை அடைய தொடங்கி உள்ளது. இந்திய கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியேற உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைக்கும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை அக்கட்சி முறிக்கும் என்று தகவல்கள் வருகின்றன.
இந்திய கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று வெளியேறுவார். அதோடு பீகாரில் முதல்வர் பதவியை நிதீஷ்குமார் நாளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
அதிமுகவிற்கு பிரஷர்: பீகாரில் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வருவார் என்ற தகவல்கள் வருவதால் அதிமுகவிற்கு பிரஷர் அதிகரித்துள்ளது. நிதிஷ் குமார் வருகையால்.. பாஜக கூட்டணி மீண்டும் வலிமை அடையும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் அயோத்தி கோவில் திறப்பு விழாவால் பாஜகவிற்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இப்போது பீகாரில் நிதிஷ் குமார் வருகையால் பாஜக கூட்டணி கூடுதல் வலிமை அடையும் வாய்ப்புகள் உள்ளன.
அந்த வகையில் அதிமுகவிற்கு பாஜக கூட்டணிக்கு திரும்புவதற்கான பிரஷர் ஏற்பட்டு உள்ளது. ஏனென்றால் திமுக காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கிறது. அப்படி இருக்க அதிமுக தேசிய கட்சி ஒன்றுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே லோக்சபா, சட்டசபை , உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது. இந்த லோக்சபா தேர்தலிலும் அதிமுக தோல்வி அடையும் பட்சத்தில் அது அதிமுகவிற்கு பெரிய பின்னடைவாக இருக்கும். அந்த வகையில் தேசிய அளவில் வலிமையாக இருக்கும் பாஜக கூட்டணிக்கு அதிமுக திரும்புவதே அந்த கட்சிக்கு வலிமை சேர்க்கும்.
இது சட்டசபை தேர்தல் கிடையாது.. லோக்சபா தேர்தல் என்பதால் அதிமுக பிரதமர் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும். அப்படி இருக்க பாஜக கூட்டணிக்கு மீண்டும் அதிமுக திரும்புவதற்கான பிரஷர் ஏற்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications