Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிதாக ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிருக்கீங்களா? வெளியான குட் நியூஸ்.. லிஸ்ட் ரெடி.. வீடு தேடி வருது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட 2,89,591 விண்ணப்பங்களில் இதுவரை 80,050 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குடும்பத்தினருக்கு அத்தியாவசிய அடிப்படை அடையாள அட்டைகளில் ஒன்றாக ரேஷன் கார்டு உள்ளது. தமிழகத்தில் அரசின் பல முக்கியமான சலுகைகளை பெற இந்த ரேஷன் அட்டையே பயன்படுகிறது. இருப்பிட சான்றாகவும் இந்த குடும்ப அட்டை பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 ரேஷன் அட்டைகள் உள்ளன.

ration card government of tamil nadu

தமிழகத்தில் மிக முக்கியமான சலுகைகளை பெறவும் ரேஷனில் மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கவும் ரேஷன் கார்டுகள் கட்டாயம். தற்போது தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெறவும் ரேஷன் கார்டு இன்றியமையாததாக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த மகளிர் உரிமை தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000-ம் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும்.

இதனால், ஒரே குடும்பத்தில் வசித்து வந்தவர்கள் பலரும் தனி குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். இதனால், விண்ணப்பங்கள் திடீரென உயர்ந்தது. இதையடுத்து இந்த பணிகள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் அட்டைகள் கிடைக்காமல் இருந்தது. இதனை தொடர்ந்து, புயல் மற்றும் கனமழையல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.

அதன்படி, 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் 45 ஆயிரத்து 509 குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது. அனால், லோக்சபா தேர்தல் காரணமாக மீண்டும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. தேர்தல் பணி முடிந்த பிறகு ரேஷன் கார்டுகளை வழங்குவதற்கான பணிகள் தொடங்கின. இதன்படி, புதிதாக ரேஷன் கார்டு கேட்டு வந்த 2,89,591 விண்ணப்பங்களில், 1,22,00 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில் 80,050 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு விட்டது. விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதில், கிட்டத்தட்ட 1 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படன. மேலும் 68,291 விண்ணப்பங்களை சரிபார்க்கும் மற்றும் கள ஆய்வுகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருப்பதால், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதிதாக ரேஷன் கார்டு கிடைக்கப்பெற்றால், தகுதியான விண்ணப்பதார்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கும் விண்ணப்பிக்க முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+