வரும் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம்
சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாக கட்டண நிர்ணய குழு அறிவித்திருந்தது. இதற்கு கல்லூரிகள் விண்ணப்பம் செய்வதற்கு ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கும் 500-க் கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் படிக்க சேர்கிறார்கள். இந்த பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
அவ்வாறு தனியார் கல்லூரியில் சேரும் கல்லூரி மாணவர்களுக்கு, கல்விக் கட்டணமாக 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை கல்லூரிக்கு ஏற்ப அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேலும், கல்லூரி அமைத்துள்ள போக்கு வரத்து, விடுதி, உணவு போன்ற வைகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்வது கிடையாது.

கூடுதல் கட்டணம்
இதனிடையே, கூடுதலாக கல்விக் கட்டணம் வசூல் செய்யும் கல்லூரிகள் மீது புகார் அளிக்க, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் (தேர்வு) தலைமையில் விசாரணை கமிட்டி உள்ளது. இந்த விசாரணை கமிட்டி தான் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீதான புகார்களை விசாரித்து வருகிறது.

புதிய கட்டணம்
இந்நிலையில் கொரோனா வைரஸ் லாக்டவுன் பிரச்னைக்கு பின்னர் நிறைய மாறுதல்களை தமிழகம் சந்தித்து வருகிறது. அந்த வகையில் வரும்ஆண்டில் பொறியியல் படிப்பில் சேரப்போகும் கல்லூரி மாணவர்கள் புதிய கல்வி கட்டணத்தை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

ஜுன் 1வரை அவகாசம்
ஏனெனில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாக கட்டண நிர்ணய குழு அறிவித்திருந்தது. இதற்கு கல்லூரிகள் விண்ணப்பம் செய்வதற்கு ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் கட்டண நிர்ணய குழு அவகாசத்தை ஜூன் 15 வரை நீட்டித்துள்ளது.

இந்தாண்டு கட்டணம்
2020- 21 முதல் 2022- 23 ஆம் ஆண்டு வரையிலான மூன்று கல்வி ஆண்டுகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்க குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கல்லூரி நிர்வாகங்கள் தங்களுக்கு ஆகும் செலவினங்கள் மற்றும் எதிர்பார்க்கும் கல்வி கட்டண உயர்வு உள்ளிட்ட விவரங்களை வரும் ஜூன் 15 ஆம் தேதிக்குள் கட்டண நிர்ணயக் குழுவின் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகங்களின் மனுக்களை ஆய்வு செய்தபிறகு நடப்பு கல்வியாண்டு துவங்குவதற்கு முன்பாக புதிய கல்வி கட்டணம் வெளியிடப்படும். புதிய கட்டணம் கல்லூரிகளை நடத்துவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்று கல்லூரிகள் விரும்புகின்றன. அதேநேரம் மாணவர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications