Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவள்ளூர் மாணவி கெளசல்யா மர்ம மரண வழக்கில் திடீர் திருப்பம்.. விசாரணையில் பகீர் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொன்னேரி அருகே திருமணமான 5 மாதத்தில் கெளசல்யா என்ற இளம்பெண் உயிரிழந்தார். இளம்பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் கணவர் ராஜேஷிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருமணத்துக்கு மீறிய உறவில் இருப்பதற்கு கௌசல்யா இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கௌசல்யா என்ற இளம்பெண் மரணமடைந்தார். பொன்னேரியில் 2 ஆம் ஆண்டு பி.எட்., படித்து வரும் கௌசல்யாவை (20), கொத்தனார் வேலை செய்து வரும் அவரது அத்தை மகன் ராஜேஷ் (30) திருமணம் செய்துள்ளார்.

Newlywed Woman s Death Takes Twist Husband Admits Murder in Tiruvallur

இதனிடையே நேற்று வீட்டில் கீழே விழுந்ததில் கெளசல்யாவுக்கு தலையில் அடிபட்டு உயிரிழந்து விட்டதாக தனியார் மருத்துவமனை உறுதி செய்ததாக கௌசல்யா வீட்டாரிடம் ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார். கௌசல்யாவுக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆகியுள்ள நிலையில் அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கௌசல்யாவின் தலை, முகத்தில் காயம் இருந்ததால் தமது மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. கௌசல்யாவின் கணவர் ராஹேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கௌசல்யாவின் கணவர் ராஜேஷ், அவரது காதலி தீபிகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணத்துக்கு மீறிய உறவில் இருப்பதற்கு கௌசல்யா இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+