Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’பரபரப்பு’ கைக்கு வந்த லிஸ்ட்.. ஒருபக்கம் என்ஐஏ.. இன்னொரு பக்கம் போலீஸ்.. சென்னையில் திடீர் சோதனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் ஒரு பக்கமும், காவல்துறையினர் இன்னொரு பக்கமும் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 45 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் கோவையில் மட்டும் கோட்டைமேடு, உக்கடம், பொன்விழா நகர் உள்ளிட்ட 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையில் சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் சென்னையில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. புதுப்பேட்டை, பெரம்பூர் ஜமாலியா, மண்ணடி ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

என்ஐஏ, போலீஸ் சோதனை

என்ஐஏ, போலீஸ் சோதனை

ஒரே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் காவல்துறையினர் தனியாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டேரியில் சலாவுதீன் என்பவர் வீட்டில் வண்ணாரப்பேட்டை ஆணையர் பவன்குமார் ரெட்டி தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் போலீஸ் சோதனை

சென்னையில் போலீஸ் சோதனை

அதேபோல் எம்கேபி நகரில் ஜகுபர் சாதிக் என்பவர் வீட்டிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் என்ஐஏ அதிகாரிகள், மறுபக்கம் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் எதிரில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை கார் வெடிப்பு

கோவை கார் வெடிப்பு

இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை நடத்திய விசாரணையில், அந்த காரில் இருந்தவர் ஜமோசா முபின் என தெரிய வந்தது. இதனையடுத்து அவர் வீட்டை சோதனையிட்டபோது, வெடிகுண்டு தயாரிக்க தேவையான 75 கிலோ வெடி பொருட்கள் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஜமோசா முபினின் உறவினர்கள் உட்பட 6 பேர் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

 என்ஐஏ விசாரணை

என்ஐஏ விசாரணை

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை, என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. பின்னர் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக என்ஐஏ அதிகாரிகள் ஒரே நேரத்தில் 45 இடங்களில் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+