தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 9 இடங்களில் திடீர் சோதனை.. சென்னையில் பரபரப்பு
சென்னை: தமிழகத்தில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
கடந்த 2018 ஆம் ஆண்டு கோவையில் ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் தொடர்புடையதாக முகமது ஆசிக் என்பவர் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த முகமது ஆசிக் கோவையில் இருந்து தப்பி மயிலாடுதுறை அருகே உள்ள நீடூரில் உள்ள கோழிக் கடை ஒன்றில் வேலை பார்த்தது தெரியவந்தது.

கோழிக் கடை
இதையடுத்து மயிலாடுதுறையில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை நீதிமன்ற உத்தரவுப்புடி பிடிவாரண்டில் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி என்ஐஏ அதிகாரிகள்
டெல்லி என்ஐஏ அதிகாரிகளால் பதிவு செய்யப்படட வழக்கிற்காக ஆதாரங்களை தேடி வருகிறார்கள். இது தொடர்பாக சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் முதற்கட்டமாக தெரிவித்துள்ளார்கள்.

சென்னையில் 4 இடங்கள்
சென்னையில் மட்டும் 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அது போல் காரைக்காலிலும் இந்த சோதனை விரிவடைந்துள்ளது. ஏதாவது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகளின் சோதனையின் முடிவில் தெரியவரும். என்ஐஏ சோதனையால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புகள்
பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான பிரச்சினைகளை விசாரணை நடத்தும் அமைப்புதான் இந்த தேசிய புலனாய்வு முகமை. இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்தால் அவர்கள் தொடர்பான விவரங்களை அறிய அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் இது போன்ற சோதனை நடத்தப்படுவது வழக்கமானதாகும்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications