அதிகாலை 3 மணி முதல்! தமிழகத்தின் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டு! சென்னையில் அல் பாசித் கைது
சென்னை: சென்னை, சீர்காழி உள்பட தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் நடத்தப்பட்ட சோதனையில் ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக மயிலாடுதுறையை சேர்ந்த அல் பாசித் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தீவிரவாதம், பயங்கரவாதம் உள்ளிட்டவைகளுக்கு ஆள் சேர்ப்பு, நிதி திரட்டுதல் உள்ளிட்ட குற்றங்களை தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்ஐஏ தடுப்பதும், அச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதும் அதன் பணியாகும்.

இந்த நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் இந்த சோதனை நடைபெறுகிறது. சீர்காழி திருமுல்லைவாசல் கிராமத்திலும் பாசல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), நசீர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் வீடுகளிலும் அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதிகாலை 3 மணி முதலே இந்த சோதனைகள் போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வந்தனர்.
இந்த சோதனையில் சென்னையில் நடந்த சோதனையில் மயிலாடுதுறையை சேர்ந்த அல் பாசித் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர் சென்னையில் தங்கி ஓட்டுநராக பணியாற்றி வந்தாராம். சீர்காழியிலும் 6 மணி நேரமாக நடந்த சோதனை நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications