நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை.. திடீரென நுழைந்த அதிகாரிகள்! உச்சகட்ட பரபரப்பு!
சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் 2 இடங்கள், சென்னை, திருச்சி, சிவகங்கை, தென்காசி ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல்லை மதிவாணன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தென்னகம் விஷ்ணு என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை ஆலாந்துறை ஆர்.ஜி.நகரில் ரஞ்சித் குமார் என்பவரின் வீட்டில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பலரின் வீடுகளில் ஒரே நேரத்தில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications