நிர்மலா தேவி வழக்கு.. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்க.. மகளிர் கோர்ட்டுக்கு ஹைகோர்ட் கிளை உத்தரவு!
நிர்மலா தேவி விசாரணை குறித்து சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்த விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்திற்கு மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: நிர்மலா தேவி விசாரணை குறித்து சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்த விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்திற்கு மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் தனது கல்லூரி மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்துள்ளார்.
இது குறித்து ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும் மாணவிகளின் புகாரின் பேரிலும் அருப்புக் கோட்டை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தொடர் விசாரணை
வழக்கை சிபிசிஐடி போலீஸார் இரண்டு மாதத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் இந்த ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை குறித்து இடையில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கையை தொடர்ந்து நிர்மலா தேவியிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டது. அதன்பின் விசாரணை அறிக்கை ஸ்ரீவில்லிபுத்துர் மகளிர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது.

பரபரப்பு அறிக்கை
இந்த வாக்குமூலத்தில் பல பரபரப்பு தகவல்களை நிர்மலா தேவி தெரிவித்து இருந்தார். தன்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்தும், ஆண்களுடன் ஏற்பட்ட தொடர்பு பற்றியும், கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் வாக்குமூலம் அளித்து இருந்தார். கல்லூரி பெண்களை எப்படி அழைப்பேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
இந்த நிலையில் இந்த வாக்குமூலம் மற்றும் விசாரணை தொடர்பான அறிக்கையை சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தனர். சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்திற்கு மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சீலிட்ட கவரில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றுள்ளது.

ஏற்கனவே அளித்தார்
ஏற்கனவே நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விசாரணை குழுவை நியமித்து இருந்தார். விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்தார். இந்த விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் ஆளுநரிடம் சமர்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications