இன்றுடன் சேர்த்து 41ஆவது நாள்.. பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை! பொதுமக்கள் சற்றே நிம்மதி
சென்னை: இந்தியாவில் தொடர்ந்து 41ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை
சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை பொட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயம் செய்து வருகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி அன்று மாற்றி அமைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை பல மாதங்களுக்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இருப்பினும், உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டது.
பிப். - மார்ச் மாதங்களில் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதேபோல கடந்த மாதம் மட்டும் பெட்ரோல் விலை 9.56 ரூபாயும் டீசல் விலை 9.86 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
இப்படி பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். நாட்டில் பல மாநிலங்களில் பஸ், டாக்ஸி, ஆட்டோ போன்ற போக்குவரத்து சேவைகளின் கட்டணம் உயர்ந்து வருகிறது.
40வது நாளாக ரெக்கார்ட்.. பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை.. இன்றைய நிலவரம் என்ன?
இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பல நிறுவனங்களும் தங்கள் பொருட்களின் விலையைக் கணிசமாக உயர்த்தி உள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எவ்வித மாற்றமும் இன்றி ஒரே விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றும் 41ஆவது நாளாக நாட்டில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 105.41 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 96.67க்கு விற்கப்படுகிறது. அதேபோல மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 120 ரூபாய்க்கும், டீசல் 104 ரூபாய்க்குமே விற்பனை செய்யப்படுகிறது.