ஆக்ஸிஜன் படுக்கைக்கு இனி தட்டுப்பாடு இருக்காது வந்த ஒரே வாரத்தில் தீயாய் வேலை செய்யும் ககன்தீப் சிங்
சென்னை: ஆக்ஸிஜன் படுக்கைக்கு தட்டுப்பாடு இருக்காது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் மூலம் சென்னை மக்களுக்கு புதுவித நம்பிக்கை பிறந்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இந்த ஒரு வாரத்தில் எத்தனை எத்தனை மாற்றங்கள்? மருத்துவமனைகளில் படுக்கை வசித இல்லாததால் ஆம்புலன்ஸில் நோயாளிகள் மருத்துவமனை வாயில்களில் காத்திருந்தனர்.
இதனால் புதிதாக உடல்நிலை பாதித்தோரை ஆம்புலன்ஸில் அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் தன்னார்வலர்கள் பலரும் ஆட்டோக்களை ஆம்புலன்ஸாக மாற்றினார்.

எஸ்யூவி கார்கள்
பார்த்தார் ககன்தீப் சிங், உடனே எஸ்யூவி கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றினார். அதிலேயே ஆக்ஸிஜனும் கொடுக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் படுக்கை இல்லாவிட்டால் ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டு அங்கேயே ஆக்ஸிஜன் தரப்படுகிறது. பேரிடர் காலம் என்பதால் இந்த சேவையைத் தற்காலிகமாகத் தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

போதுமான வசதிகள்
அவற்றிற்கு சிறப்பு ஆம்புலன்ஸ்கள் என பெயரிட்டிருந்தார். இதையடுத்து 250 கார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. இது போல சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் படுக்கைகள், சுமார் 500 பேருக்கு போதுமான வசதிகளை கொண்டிருக்கிறது.

புதிய நம்பிக்கை
இதனால் தற்போதைக்கு சென்னையில் படுக்கை வசதி தேவைப்படுவோர் பெரும்பாலானோர் பலனடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எடுத்துள்ள இந்த முயற்சிகள் வரும் நாட்களில் சென்னையில் கொரோனாவை எதிர்கொள்வதில் புதிய நம்பிக்கையைக் கொடுக்கும் என தெரிகிறது.

பொதுமக்கள்
இனி சென்னையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை இருக்காது என மக்களுக்கு புதுவிதமான புத்துணர்ச்சியை கொடுத்துள்ளார் ககன்தீப் சிங். விரைவில் கொரோனாவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்துவிடும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications