செப்.1 முதல் பேருந்துகள் இயக்கம்- வழிபாட்டு தலங்கள் திறப்பு... இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டாலும் மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்படும், வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளால் தமிழகம் 6 மாதங்களுக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்ப இருக்கிறது.
Recommended Video
கொரோனா பரவலால் உலகமே பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது. இந்தியாவில் தமிழகம் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் 2-வது இடத்தில் இருக்கிறது.

கொரோனா குணமாதல் அதிகரிப்பு
இன்னொருபக்கம் கொரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கையும் மிகவும் அதிகரித்து உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கை சுமார் 76% ஆக உள்ளது. இதனால் மத்திய அரசு லாக்டவுன் கால பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கியது.

அதிரடி அறிவிப்புகள்
இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் இ பாஸ் முறை ரத்து உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டது. இதில் மிக முக்கியமாக மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது; வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில்
மேலும் வணிக வளாகங்கள், ஷோரூம்கள் வழக்கம் போல இயங்கலாம். சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து கடைகளும் இரவு 8 மணிவரை இயங்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

தீவிர லாக்டவுன் ரத்து
மிக முக்கியமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கிகள், அதுசார்ந்த நிறுவனங்கள் 100% பணியாளர்களுடம் இயங்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் இயல்பு நிலை திரும்ப இருக்கிறது.












Click it and Unblock the Notifications