Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒன்றுக்கும் அதிக பாடங்களில் தோற்றால் துணைத் தேர்வு இல்லை.. கேவி பள்ளி வழக்கில் ஐகோர்ட் ஆணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மத்திய அரசின் கல்வித்துறைக்கு கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்களை, துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

No Supplementary Exam for multiple failures in plus one in Kendriya Vidyalaya school - High court order

கடந்த மே மாதம் இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 2018 ஆம் ஆண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவிக்கு, துணைத் தேர்வு எழுத சென்னை உயர் நீதிமன்றம், அனுமதி வழங்கி உள்ளதாக மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கும் பள்ளி நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக வாதிட்டனர்.

கேந்திரிய வித்யாலயா தரப்போ, சம்பந்தப்பட்ட மாணவி வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்காகவே துணைத் தேர்வு எழுத உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதாகவும், அந்த உத்தரவு இந்த வழக்கிற்கு பொருந்தாது என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி இல்லை என்ற விதிகள் உள்ளதாக தெரிவித்தது.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி தண்டபாணி, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் 11 ஆம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஒருமுறை நடவடிக்கையாக துணைத்தேர்வு நடத்த வேண்டும் என கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கேந்திரிய வித்யாலயா சங்கதன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, அனைத்து பாடங்களிலும் வெற்றி பெற்ற மாணவர்களே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என கேந்திரிய வித்யாலயா விதிகள் உள்ளதாக கூறி, 11 ஆம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்தும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+