ஹையோ ஹையோ.. ஓபிஎஸ் நிலைமையை பார்த்தீங்களா.. வேறு வழியில்லை.. எடப்பாடி தரப்பு அட்டாக்
ஓபிஎஸ் தரப்பு வேறு வழியின்றி பின்வாங்கியுள்ளதாக செம்மலை தெரிவித்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து வேறு வழியின்றி ஓபிஎஸ் பின்வாங்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் செம்மலை தெரிவித்துள்ளார். பொதுக்குழுவின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே அதிகம் என்பதால், ஓபிஎஸ் வேறு வழியின்றி வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு நீடித்து வந்த குழப்பத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்போம் என்றும் ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த முன்னாள் எம்எல்ஏ தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. நேற்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறவிட்டதாக குற்றம்சாட்டிய ஓபிஎஸ் தரப்பு, இன்று திடீரென வேட்பாளரை வாபஸ் பெற்று ட்விஸ்ட் கொடுத்துள்ளது.

ஓபிஎஸ் பின்வாங்கிவிட்டார்
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் செம்மலை செய்தியாளர்களிடம் கூறுகையில், பெருந்தன்மையோடு ஓபிஎஸ் தரப்பு நடந்திருக்கிறது என்றால், சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்க கூடாது. இதுவொரு காலம் கடந்த அறிவிப்பாக கருதுகிறோம். ஓபிஎஸ் தரப்புக்கு வேறு வழியில்லை. இதனால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இரட்டை இலைக்கு ஆதரவு கேட்போம் என்று கூறுகிறார்கள். ஆனால் வேட்பாளருக்கு ஆதரவில்லை என்கிறார்கள்.

ஓபிஎஸ் நடவடிக்கை
நாரதர் கழகம் நன்மையில் முடியும் என்பார்கள். ஆனால் ஓபிஎஸ் தரப்பு செய்து வந்த குழப்பத்திற்கு, அவர்களாலேயே ஒரு முடிவு கிடைத்துள்ளது. அதற்கு காரணம், அவர்களுக்கு வேறு வழியில்லை. இதுதான் முடிவு என்று தெரிந்துகொண்டு , ஓபிஎஸ் தரப்பு பின்வாங்கியுள்ளது. தொடக்கத்தில் இருந்தே ஓபிஎஸ், இரட்டை இலை முடங்க காரணமாக இருக்க மாட்டேன் என்றார். ஆனால் அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் இரட்டை இலை முடக்கப்படுவதற்கான நடவடிக்கையாகவே இருந்தது.

மீசையில் மண் ஒட்டவில்லை
உச்சநீதிமன்றம் பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய உத்தரவிட்டதால், ஓபிஎஸ் தரப்பு பின்வாங்கி இருக்கிறது. ஏனென்றால் பொதுக்குழுவின் 95 சதவிகித ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வேட்பாளர் தேர்வில் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஓபிஎஸ் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வது போல், வேறு வழியின்றி பின்வாங்கி இருக்கிறார்கள்.

இபிஎஸ் அணிக்கே இரட்டை இலை
அதேபோல் இனி வரும் காலங்களிலும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே கிடைக்கும். ஏனென்றால் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனின் தேர்வுக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்குகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications