Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்.. அடுத்ததாக டிடிவி தினகரனுடன் சந்திப்பு.. ஓபிஎஸ் பரபர அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாவட்ட நிர்வாகிகள் நியமனத்துக்கு பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. டிடிவி தினகரனுடன் சந்திக்க உள்ளேன் என சென்னையில் ஓ பன்னீர் செல்வம் இன்று பகிரங்கமாக அறிவித்தார்.

அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இது அதிமுகவில் இணைந்து செயல்பட்ட ஒ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே பிரிவை ஏற்படுத்தியது.

பொதுக்குழு பிரச்சனை உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நீதிமன்றங்களை மாறி மாறி நாடினர்.

ஓ பன்னீர் செல்வம் தனி அணி

ஓ பன்னீர் செல்வம் தனி அணி

தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது செல்லாது என ஓ பன்னீர் செல்வம் தரப்பு கூறி வரும் நிலையில் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

 நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் சந்திப்பு

நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் சந்திப்பு

இந்நிலையில் தான் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் இன்று ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த நிர்வாகிகள், தொண்டர்களை ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு ஓ பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு ஓ பன்னீர் செல்வம் பதிலளித்தார்.

 மாவட்ட செயலாளர் கூட்டம்

மாவட்ட செயலாளர் கூட்டம்

பத்திரிகையாளர் ஒருவர், ‛‛அதிமுகவில் அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறதேன. ஒட்டு மொத்தமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வைக்கும் திட்டம் உள்ளதா'' என கேள்வி கேட்டார். இதற்கு ஓ பன்னீர் செல்வம், ‛‛அதிமுக சார்பில் கூடிய விரைவில் அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது'' என பதிலளித்தார்.

பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

இதையடுத்து இன்னொருவர், ‛‛மாவட்ட செயலாளர்களுடன் பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்துள்ளீர்கள். இதனால் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுமா?'' என கேள்வி எழுப்பினர். இதற்கு, ஓ பன்னீர் செல்வம், ‛‛உறுதியாக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தைபோல் பொதுக்குழு கூட்டமும் நடக்கும்'' என்றார். அப்போது, ‛‛மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வீர்களா?'' என்ற கேள்விக்கு ஓ பன்னீர் செல்வம், ‛‛அனைத்து நிர்வாகிகளும் அறிவித்த பிறகு அனைத்து மாவட்டங்களிலும் உறுதியாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்'' என்றார்.

மோடி-அமித்ஷா சந்திப்பு விபரம்

மோடி-அமித்ஷா சந்திப்பு விபரம்

இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினீர்கள். அரசியல் சூழலில் ஏதேனும் மாற்றம் வருமா?'' என வினவினார். இதற்கு ஓ பன்னீர் செல்வம், ‛‛பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று வழியனுப்பி வைத்தோம். அதேபோல் தனியார் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம். இதில் எந்தவித அரசியல் சூழல் பற்றியும் பேசவில்லை'' என்றார்.

டிடிவி தினகரனுடன் சந்திப்பு

டிடிவி தினகரனுடன் சந்திப்பு

மேலும் ‛‛வாய்ப்பு கிடைத்தால் ஓ பன்னீர் செல்வத்தை சந்திப்பேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அவரை நீங்கள் சந்திப்பீர்களா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஓ பன்னீர் செல்வம், ‛‛இதுதொடர்பாக நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனை சந்திப்பேன்'' என கூறினார். இதையடுத்து, ‛‛கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்ற கேள்விக்கு, ஓ பன்னீர் செல்வம் பதிலளித்தார். அப்போது அவர், ‛‛உள்ளே இருக்கும் உள்கருத்துகளை அவரிடம் தான் கேட்க வண்டும்'' என ஓ பன்னீர் செல்வம் கூறினார்.

டிடிவி தினகரன் கூறியது என்ன?

டிடிவி தினகரன் கூறியது என்ன?

அதிமுகவில் ஒன்றாக இருந்த ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தற்போது தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர். இதில் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. சமீபத்தில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் பெரிய கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இதில் டிடிவி தினகரன் கட்சிக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்தார். இதையடுத்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைக்க கால் சதவீதம் கூட விரும்பவில்லை. வாய்ப்பு கிடைத்தால் ஓ பன்னீர் செல்வத்தை சந்திப்பேன் என தெரிவித்தார். இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வமும் வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனுடன் சந்திப்பேன் என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+