5 ஆண்டுகளில் 2-வது முறையாக அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் 2-வது முறையாக ஓ.பன்னீர்செல்வம் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக மீண்டும் நீக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

    அதிமுகவில் இருந்து OPS நீக்கம் - தீர்மானம் கொண்டு வந்தார் நத்தம் விஸ்வநாதன்!

    2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த உடனேயே தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால் சில மாதங்களிலேயே அப்பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை சசிகலா ஏற்க திட்டமிட்டிருந்தார்.

    இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக, சசிகலா தலைமைக்கு எதிராக அதிமுகவில் தர்மயுத்தம் நடத்தினார். இதனையடுத்து அப்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த சசிகலா, ஓபிஎஸ் வசம் இருந்த அதிமுகவின் பொருளாளர் பதவியை முதலில் பறித்தார். திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராகவும் சசிகலா நியமித்தார்.

    O.Panneerselvam 2nd time expelled from AIADMK

    இதன்பின்னர் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    இதன்பின்னர் காட்சிகள் மாறின; அதிமுகவில் இபிஎஸ் தலைமை உருவானது; அந்த தலைமையுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்தார். அதனால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.

    தற்போது அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். அவருடன் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் 2-வது முறையாக நீக்கப்பட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+