அதிமுக அலுவலகத்திற்கு சீல்..! உயர் நீதிமன்ற படிக்கட்டேறிய ஓ.பன்னீர்செல்வம்! முந்திக் கொண்ட எடப்பாடி!
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவுசெய்ய இருதரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ வரும் 25ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று இருதரப்பினருக்கும் வருவாய்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

நேற்று ஓபிஎஸ் கட்சி தலைமை அலுவலகம் வருகிறார் என என்பதை கேள்விப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களும் அங்கு சரிசமமாக குவிந்தனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவிய நிலையில் கற்கள் கட்டைகள் உள்ளிட்டவற்றால் மாறி மாறி இருதரப்பு ஆதரவாளர்களும் கடுமையாகத் தாக்கி கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்து ஆவணங்களும் எடுக்கப்பட்டதால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும் என அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன் முறையீடு செய்தார்.
இந்நிலையில் இன்னும் தான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என ஓபிஎஸ் கூறி வரும் நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்பும் மனு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications