பெற்ற தாயின் திதிக்கே ரவீந்திரநாத் வரவில்லை! மகனால் மனம் நொந்த ஓ.பன்னீர்செல்வம்! போட்டுடைத்த காயத்ரி
சென்னை: பெற்ற தாயின் திதிக்கு கூட தனது மகன் ரவீந்திரநாத் எம்.பி. வரவில்லை என்றும் தனது பேச்சை கேட்கும் நிலையில் மகன் இல்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் மனம் நொந்து போய் கூறியதை ஊடகங்களிடம் போட்டுடைத்திருக்கிறார் காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி.
இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் குடும்ப பஞ்சாயத்து வீதிக்கு வந்துள்ளது. ஏற்கனவே கட்சியில் செல்வாக்கை இழந்து கடும் மன உளைச்சலில் இருந்து வரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மூத்த மகன் ரவீந்திரநாத் மீது எழுந்துள்ள பாலியல் தொல்லை குறித்த புகார் மன வேதனையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ் க்கும் அவரது மகன்களுக்கும் சரியான புரிதல் இல்லை, கருத்து வேறுபாட்டுடன் தான் காலங்கள் நகர்வதாக தகவல்கள் உலா வந்த நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் காயத்ரி தேவி கூறியிருப்பது அமைந்துள்ளது.
சொந்த மகனை கூட கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில் தான் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார் என்பதை காயத்ரி தேவி போகிற போக்கில் கூறியிருக்கிறார். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தை நம்பியுள்ள ஆதரவாளர்களுக்கு சூசகமான மெசேஜ் ஒன்றையும் காயத்ரி தேவி தெரிவித்திருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் காயத்ரி தேவி. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்விட்டு இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஓ.பி.ரவீந்திரநாத் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தேனியில் வெற்றி பெற்றது செல்லுமா செல்லாதா என நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்து வரும் ரவீந்திரநாத்துக்கு காயத்ரி தேவி கொடுத்துள்ள புகார் புது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications