மதித்தால் மதிப்போம்! மிதித்தால் மிதிப்போம்! பாஜகவை நம்பி நாங்கள் இல்லை! -பெங்களூர் புகழேந்தி!
சென்னை: பாஜகவை நம்பி நாங்கள் இல்லை என்றும் மதித்தால் மதிப்போம், மிதித்தால் மிதிப்போம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் என்றும், ஓபிஎஸ் ஐ முன்னாள் முதல்வர் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது;

''நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் கொடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அமமுக ஆதரவோடு போராட்டம் நடத்தினோம். அம்மா வாழ்ந்த இடத்தில் கொலை கொள்ளை நடந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் 90 நாட்களில் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் எனக் கூறியிருந்தார்.''
''கொடநாடு எஸ்டேட் பற்றின் ஜெயக்குமார் ஒன்றும் தெரியாமல் பேசி வருகிறார். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று அண்ணாமலை பேசுகிறார் . ஆனால் என்டிஏ கூட்டம் நடந்தபோது ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கவில்லை. எனவே அன்புடன் உங்களது கூட்டணி முடிந்து விட்டது. "தாய்ப்பகை குட்டி உறவு" என்பது வேண்டாம். மறுநாள் நடந்த குளிர்கால கூட்டத் தொடரின் இப்போது ஃப்ளோர் லீடர் ரவீந்திரநாதை அழைக்கிறீர்கள். ''
''உங்களை நம்பி நாங்கள் இல்லை. நீங்கள் மதித்தால் மதிப்போம், மிதித்தோல் மிதிப்போம் என்ற கொள்கையை கொண்டவர் எங்கள் அண்ணன் ஓபிஎஸ். அண்ணாமலை பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு வருகிறார். ஆனால் ஓபிஎஸ்-ஐ ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடுவது இல்லை. அண்ணாமலை மீண்டும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் என்றும், ஓபிஎஸ்-ஐ முன்னாள் முதல்வர் என்றும் குறிப்பிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.''












Click it and Unblock the Notifications