திருவொற்றியூரில் ஆலிவ் ரிட்லி ஆமை, ராமேஸ்வரம் கடலில் திமிங்கலம்! தொடர்ந்து பலியாகும் கடல் உயிர்கள்
சென்னை: திருவொற்றியூர் கடற்கரையில் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமையும், ராமேஸ்வரம் கடல் கரையில் திமிங்கலம் ஒன்றும் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் சூழலியல் ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. ஆனால் சமீப காலமாக இதனை மறந்து மனிதர்கள் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் சூழலியலை கடுமையாக பாதிக்கிறது. குறிப்பாக கடல் வாழ் உயிரினங்களின் அழிவுக்கு இது இட்டுச் சென்றிருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட உயிரினம் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள்தான். சாதாரண மீன்பிடி படகுகள் மூலம் ஆமைகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இழு வலையை பயன்படுத்தும் பெரிய கப்பல்கள் இந்த ஆமைகளின் அழிவுக்கு காரணமாக இருக்கிறது.

இழு வலை மீன்களோடு சேர்த்து ஆமைகளையும் இழுத்து வந்துவிடுகிறது. ஆமைக்கள் வலையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பே அவை இறந்துவிடுகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக TED எனப்படும் ஆமைகளை விடுவிக்கும் கருவிகளை நவீன மீன்பிடி படகுகளில் பொதுத்த வேண்டும் என்று மேலை நாடுகளில் சட்டமே இருக்கிறது. ஆனாலும் இது எதிர்பார்த்த அளவுக்கு பலனை கொடுக்கவில்லை. வலைகள் தவிர, படகுகளின் என்ஜின் இறக்கைகள் மோதுவதாலும் ஆமைகள் இறந்துவிடுகிறது.
மேலும் ஒளி மாசு ஆமைகளின் எண்ணிக்கை குறைவுக்கு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. ஆலிவ் ஆமைகள் கடற்கரையில் முட்டைகளை இடுகின்றன. முட்டைகளிலிருந்து வெளிவரும் குட்டி ஆமைகளால் தலையை உயர்த்தி பார்க்க முடியாது. கரையிலிருந்து பார்க்கும்போது கடல்தான் ஒளிமிக்க பகுதியாக தெரியும். கடல் சூரிய ஒளியை/நிலவின் ஒளியை எதிரொலிப்பதால் அப்படி தெரிகிறது. ஒளிமிக்க பகுதி எதுவோ அதை நோக்கிதான் பயணிக்க வேண்டும் என்பது ஆமைகளின் மரபணுவில் காலம் காலமாக கடத்தப்பட்ட ஒரு தகவல்.
எனவேதான் ஆமை குஞ்சுகள் பொறிந்தவுடன் கடலை நோக்கி பயணிக்கின்றன. ஆனால் தற்போது கடற்கரையில் சொகுசு விடுதிகள் உள்ளிட்டவை அதிகரித்துவிட்டன. எனவே ஆமைகள் தனது பாதையை மாற்றி நிலப்பரப்புக்கு வந்து உயிரிழந்துவிடுகிறது. டைனோசருக்கு முன்பிருந்து வாழ்ந்து வந்த இந்த ஆமை இனங்கள் மனித நடவடிக்கைகளால் அழிந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சூழலியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆமையின் ஆயுள் இப்படி முடிகிறது என்றால், மறுபுறம் திமிங்கலங்களின் கதை சற்று வித்தியாசமானது.
இது அளவில் பெரிய உருவாமாக இருந்தாலும், இதனால் பெரிய சைஸில் உள்ள உயிரினங்களை சாப்பிட முடியாது. அதை துண்டு துண்டாக கிழித்துதான் சாப்பிட முடியும். அல்லது சிறி சிறிய மீன்களைதான் சாப்பிட முடியும். ஆனால் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சிறிய மீன்கள் சாப்பிடுவதும், அந்த மீன்களை திமிங்கலங்கள் சாப்பிடுவதன் மூலம் அதன் ஆயுளுக்கு முடிவுரை எழுதப்படுகிறது.
இப்படி தொடர்ந்து கடல்வாழ் உயிர்கள் பாதிப்புக்கு உள்ளாவது, அதை சார்ந்து இருக்கும் சூழலையும், மனிதர்களையும் கூட விரைவில் பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு நடுவில்தான் திருவொற்றியூர் கடற்கரையில் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமையும், ராமேஸ்வரம் கடல் கரையில் திமிங்கலம் ஒன்றும் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications