ஒரு நிமிடம் கூட மிஸ்ஸாக கூடாது! எல்லா பள்ளிகளுக்கும் ஸ்டாலின் அதிரடி "ஆர்டர்".. இதை படிங்க முதல்ல
சென்னை: இந்தியாவிற்கே எடுத்திக்காட்டாக தமிழ்நாட்டில் முதல்முறையாக காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த உணவு திட்டம் தற்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் இந்தியா முழுக்க மதிய உணவு திட்டம் கொண்டு வருவதற்கு முன்னோடியாக இருந்த மாநிலமே தமிழ்நாடுதான்.
தமிழ்நாட்டை பார்த்துதான் மதிய உணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திலும் கூட தற்போதும் தமிழ்நாடுதான் சிறந்து விளங்கி வருகிறது.
இப்போதும் கூட மதிய உணவில் 5 முட்டை போடும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

திட்டம்
முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு மதிய உணவில் வாழைப்பழம் வழங்கும் திட்டமும் தமிழ்நாட்டில்தான் முதலில் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் முதல்முறையாக காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராமப் பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட உள்ளது.

காலை உணவு திட்டம்
தேசிய அளவில் தற்போது இந்த திட்டம் கவனிக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் இந்த திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டம் மூலம் நேரடியாக ஒரு லட்சத்து 14,095 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எப்படி செயல்படுத்தப்படும்?
மொத்தம் ரூ.33.56 கோடியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் இந்த திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சில முக்கியமான உத்தரவுகளை பள்ளிகளுக்கு பிறப்பித்து உள்ளார். உணவுகளை காலையில்தான் சமைக்க வேண்டும். அதோடு காலை 7.45 மணிக்குள் சமையல் பணிகள் முடிக்க வேண்டும். மாணவர்கள் காலை உணவு சாப்பிட 30 நிமிடம் முன் கூட்டியே வருவார்கள் என்பதால் உணவு தயாராக இருக்க வேண்டும்.

மெனு உணவு
இதனால் நேரம் தவற கூடாது. மெனுவில் இருக்கும் உணவுகளை மட்டுமே கொடுக்க வேண்டும். அந்த நாளுக்கு கொடுக்கப்பட்டுள்ள உணவு ஆப்ஷனில் இருந்து மட்டுமே தேர்வு செய்து உணவு சமைக்க வேண்டும். உணவுகளை மிகவும் சுத்தமாக சமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சார்பாக பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications