ராமநாதபுரம் கருப்பூர் அரசு பள்ளியில் இப்படியும் ஒரு சம்பவம்.. பொதுமக்களை அதிர வைத்த புகைப்படம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை யூனியன் கருப்பூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த ஆண்டு 2 குழந்தைகள் 2-ம் வகுப்பில் படித்தனர். தற்போது 3-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சென்றுள்ளனர். இந்த ஆண்டு புதிதாக 1-ம் வகுப்பில் 2 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்னர். மொத்தமாக 4 பேர் படிக்கும் அரசு பள்ளிக்கு ஒரே ஒரு மாணவி மட்டும் வருகை தந்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இதனிடையே பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிராமப்புறங்களிலும் நடுத்தரக் குடும்பங்களிலும் கூட, "ஆங்கிலம் பேசினால்தான் எதிர்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும்" என்ற எண்ணம் பரவலாக விதைக்கப்பட்டு விட்டது. இதனை உணர்ந்தே அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளின் விளம்பர உத்திகளோடு அவற்றால் போட்டி போட முடிவதில்லை.

பல அரசுப் பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதிகள், தூய்மையான குடிநீர், விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் போன்ற நவீன வசதிகள் குறைவாக இருப்பதாக பெற்றோர்கள் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் பல பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி சென்றுவிட்டார்கள். அதேபோல் பல கிராமத்துப் பள்ளிகளில் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இருக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பாடம் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதனால் தனிப்பட்ட கவனம் செலுத்துவது சவாலானதாக மாறிவிடுவதாக ஆசிரியர்கள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள். இதுவும் கவனிக்க வேண்டிய அம்சம் ஆகும். அதேபோல் தனியார் பள்ளிகள் கிராமங்களின் உள்ளே வரை வாகனங்களை அனுப்பி குழந்தைகளை அழைத்துச் செல்கின்றன. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி கருதி பெற்றோர் இதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இந்த வசதி அரசு பள்ளிகளில் இல்லை.. இதனால் பல அரசு பள்ளிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. அப்படியான ஒரு பள்ளியை பற்றித்தான் பார்க்க போகிறோம்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ளது கருப்பூர் கிராமம். இந்த கருப்பூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் கடந்த ஆண்டு 2 குழந்தைகள் 2-ம் வகுப்பில் படித்தனர். தற்போது 3-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சென்றுள்ளனர். இந்த ஆண்டு புதிதாக 1-ம் வகுப்பில் 2 குழந்தைகள் சேர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
எனவே 4 மாணவர் படிக்கும் பள்ளியில், புதிதாக சேர்ந்த 2 குழந்தைகளும், 3-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்ற மாணவரும் வரவில்லை. ஒரே ஒரு மாணவி மட்டுமே பள்ளிக்கு வருகிறாள். இந்த மாணவிக்கு பாடம் எடுப்பதற்காக ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். இப்பள்ளிக்கான மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருவாடானை வட்டார கல்வி அலுவலர் தமிழரசி, இந்த ஆண்டு கருப்பூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சேர்க்கப்பட்ட 2 குழந்தைகளின் பெற்றோரிடமும் பேசி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கூறி வருகிறோம். மேலும் கிராம கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது
மக்களின் ஒத்துழைப்புடன் கருப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடர்ந்து செயல்படும். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தற்போது அப்பள்ளியில் மாற்று பணி ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். விரைவில் நிரந்தர ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார்" இவ்வாறு அவர் கூறினார்.
சில கிராமங்களில் ஊர்க் கூட்டத்தைக் கூட்டி, "நம் கிராமத்தில் இருக்கும் அனைத்துக் குழந்தைகளும் உள்ளூர் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும், மீறி தனியார் பள்ளிக்கு அனுப்பினால் அபராதம் அல்லது ஊர் விலக்கம்" போன்ற கடுமையான, ஆனால் நேர்மறையான கட்டுப்பாடுகளை விதித்து 100% சேர்க்கையை உறுதி செய்திருக்கிறார்கள்.
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கிராமங்களில் இதனை செய்தியாளன் என்கிற முறையில் நேரில் பார்த்திருக்கிறேன். அந்த ஊர் மக்களிடம் ஒரு 10வருடம் முன்பு அரசு அதிகாரிகள் வந்து உங்கள் பள்ளியை மூடப்போகிறோம் என்றார்கள். அவர்கள் எங்கள் உடனே பிரச்சனையை புரிந்து மறுவருடமே பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தேன். ஊரே சேர்ந்து பள்ளியை காப்பாற்றியது.அப்படியான சம்பவங்கள் மற்றும் மக்களியே அரசு பள்ளிகள் குறித்த மனமாற்றம் நடந்தால், மீண்டும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரும்.












Click it and Unblock the Notifications