எதிர்கட்சித்தலைவர் இபிஎஸ் அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க அனுமதி - அவகாசம் கேட்ட ஓபிஎஸ்
முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்தில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் பங்களாவை காலி செய்ய ஓ.பன்னீர்செல்வம் அவகாசம் கேட்டுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு ஆட்சியில் அப்போதைய அமைச்சர்கள் பலரும் 10 ஆண்டுகளாக தொடர்ந்து வசித்து வந்தனர்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்துள்ளது. மே 2ஆம் தேதியன்று ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. இதனால் அரசு பங்களாவை அங்கிருந்த முன்னாள் அமைச்சர்கள் காலி செய்ய வேண்டும் என்பது விதி.
அரசு இல்லங்களில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர்கள் வீட்டை காலி செய்துள்ள நிலையில் அங்கு புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து புதிய அமைச்சர்கள் இங்கு குடியேறுவார்கள்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக செவ்வந்தி அரசு இல்லத்தில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி அங்கேயே தங்குவதற்கு அனுமதி கோரி கோரிக்கை வைத்தார். அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பங்களாவை காலி செய்ய ஓ.பன்னீர்செல்வம் அவகாசம் கேட்டுள்ளார். தனது தம்பி ஓ.பாலமுருகன் மறைவால் முழுமையாக பங்களாவை காலி செய்ய முடியவில்லை என்று கூறி அவகாசம் கேட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது ஒருமுறை தனது அரசு இல்லத்தை காலி செய்த ஓபிஎஸ் சென்னையில் புது வீடு பார்த்து குடியேறினார். மீண்டும் அதிமுக ஒன்றுபட்ட உடன் துணை முதல்வரான ஓபிஎஸ் மீண்டும் அரசு இல்லத்தில் குடியேறினார். தற்போது எம்எல்ஏவாக மட்டுமே உள்ள ஒபிஎஸ் அமைச்சர் பங்களாவை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications