ஒரு முறை 2 முறை அல்ல... 14 முறை முல்லை பெரியாறுக்கு சென்றிருக்கிறேன்... திமுக அரசுக்கு OPS பதில்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முல்லை பெரியாறு அணை என்பது தன் வாழ்வில் பின்னிப் பிணைந்த ஒன்று என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் என்கிற முறையில் 14 முறை முல்லை பெரியாறு அணை பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணையை ஒரு முறையாவது ஓ.பி.எஸ். சென்று பார்வையிட்டிருப்பாரா என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதில் கொடுத்துள்ளார் அவர்.

துரைமுருகன் கேள்வி

துரைமுருகன் கேள்வி

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று முன் தினம் முல்லை பெரியாறு அணையை நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேனியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் முல்லை பெரியாறு அணைக்கு ஒரு முறையாவது நேரில் சென்று ஆய்வு செய்திருப்பாரா என்றும் முல்லை பெரியாறு அணை குறித்து பேச அதிமுகவுக்கு உரிமையே இல்லை எனவும் சாடியிருந்தார்.

ஓ.பி.எஸ். பதில்

ஓ.பி.எஸ். பதில்

அமைச்சர் துரைமுருகனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், 2002 முதல் 2006 வரையிலான காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையிலும், 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளிலும், இதேபோல் 2015 முதல் 2021 வரை தேனி மாவட்ட அமைச்சர் என்கிற முறையிலும் முல்லை பெரியாறு அணைப்பகுதிக்கு சென்று அங்கு ஆய்வு நடத்திய அனுபவம் தனக்கு உண்டு எனக் கூறியுள்ளார்.

14 முறை ஆய்வு

14 முறை ஆய்வு

இதுமட்டுமல்லாமல் முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக் வாழ்ந்த இல்லத்திற்கும் சென்று இல்லத்தின் பழமையான வடிவம் மாறாமல் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இதுவரை 14 முறை முல்லை பெரியாறு அணைப்பகுதிக்கு சென்றிருப்பதாகவும், அந்த அணையுடன் தனது வாழ்க்கை பின்னி பிணைந்தது எனவும் ஓ.பி.எஸ். கூறியிருக்கிறார்.

 விவசாயிகள் சந்தேகம்

விவசாயிகள் சந்தேகம்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின் சந்தேகத்தை போக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். முல்லை பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதிக்கு கடந்த வாரம் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை , ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+