படத்தில் என்ன தெரிகிறது..! ஒருவர் பனிமலை மீது ஏறுகிறார்ன்னு நினைச்சா தப்பு! உண்மை என்ன தெரியுமா?
சென்னை : இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் நீங்கள் என்ன நினைத்து இருப்பீர்கள், பனி படர்ந்த ஒரு மலையின் மீது ஒரு மனிதன் ஏறுவதைப்போல பார்த்திருப்பீர்கள். ஆனால் உண்மை அதுவல்ல உண்மையிலேயே அந்த படத்தில் இருப்பது என்ன? ஆப்டிகல் இல்யூஷன் என்றால் என்ன என்பது குறித்து பார்க்கலாம்..
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒருவகையான 2டி மற்றும் 3டி மாதிரியான ஒரு வகை படக்கலைதான். ஆனால் சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல், உங்கள் மூளைக்கு வேலை கொடுத்து சற்றே யோசிக்க வைக்கும் ஒரு கலை.
அதன் படி நீங்கள் பார்க்கும், ஒரு புகைப்படம் அல்லது உருவம் உண்மையான வடிவத்தில் தான் இருக்கும், ஆனால், நீங்கள் அதனை சாதாரணமாகவோ, மேலோட்டமாகவோ பார்க்கும் அதன் உருவம் வேறு மாதிரி இருக்கும், இதன் மூலம் குழப்பம் மட்டுமில்லை, உங்கள் கேரக்டரையே சொல்லி விடலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் போட்டோ
சரி தற்போது இந்த படத்துக்கு வருவோம். என்ன தெரிகிறது. நன்றாக யோசித்துப் பாருங்கள். ட்விட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த படம் சமூக வலைதளவாசிகளை வெகுவாக பேச வைத்திருக்கிறது. இங்கு இருப்பதை நீங்கள் கண்டுபிடிக்க இரண்டு முறை யோசிக்க வேண்டும்.

படத்தில் என்ன தெரிகிறது
வயர்டு நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் நிக்கோலஸ் தாம்சன் வெளியிட்டுள்ளார். பெரும்பாலானவர்கள் இந்த படத்தை பார்க்கும்போது பனி படர்ந்த மரங்கள் இருக்கும் ஒரு மலை பாதையில் ஒரு மனிதன் நடப்பது போல் தான் இருக்கும். ஆனால் அது உண்மையிலேயே ஒரு மனிதனே இல்லை நன்றாக உற்றுப் பாருங்கள்..

பனிமலையில் கரடி
பனிமலையில் கரடி ஒன்று நடந்து வருவது உங்களுக்குத் தெரிகிறதா? ஆனால் உண்மை அதுவும் கிடையாது பனி படர்ந்த இடங்களில் வெள்ளைக் கரடிகள் மட்டுமே இருக்கும் கருப்பு நிற கரடிகள் வசிப்பதற்கு வாய்ப்பே இல்லை. எனவே மனிதனும் அல்ல, கரடியும் அல்ல.

கருப்பு நாய்
குழப்பமாக இருக்கிறதா? அதனால் தான் இந்த படத்தை ட்விட்டரில் சுமார் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் லைக் செய்து இருக்கிறார்கள். நன்றாக உற்றுப் பாருங்கள் இப்போதாவது தெரிகிறதா இந்த படத்தில் இருப்பது உண்மையில் ஒரு நாய். இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் இது ஒரு நாய் என்று.












Click it and Unblock the Notifications