ஒரே அறிவிப்பு.. 40% இந்திய ஊழியர்கள் பணிநீக்கம்.. Oracle எடுத்த முடிவுக்கு பின்னால் முக்கிய காரணம்..!!
ஆரக்கிள் நிறுவனம் உலகின் மிகப்பெரிய கிளவுட் மற்றும் டேட்டாபேஸ் சேவை வழங்கும் முக்கியமான நிறுவனமாகும். ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆரக்கிள் தற்போது OpenAI, Meta, Nvidia மற்றும் xAI போன்ற AI நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பெரிய பெரிய டேட்டா சென்டர்களை உருவாக்கி வருகிறது.
இதற்காக 2026ஆம் ஆண்டில் மட்டும் ஆரக்கிள் நிறுவனம் சுமார் 50 பில்லியன் டாலர் வரையில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிதியை கடன் மற்றும் பங்கு விற்பனை அல்லது அடமானம் வைப்பதன் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

இப்படி செயற்கை நுண்ணறிவு (AI) முதலீடுகள் வேகமாக உயர்ந்தி வரும் ஆரக்கிள் இத்துறையில் பெரும் வர்த்தகத்தையும், வருமானத்தையும் பெற வேண்டும் என முடிவு செய்துள்ளது. இதற்காக மற்ற திட்டங்களையும், செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ள நிலையில், பெரிய அளவிலான பணிநீக்கங்கள் உருவாகி வருகின்றன. இந்த பணிநீக்கங்கள் மூலம் செலவுகளையும் குறைக்க முடியும் என்பதால் கண்களை மூடிக்கொண்டு பணிநீக்கம் செய்யப்படுகிறது.
ஆரக்கிள் நிறுவனத்தின் உலகளாவிய மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவில் மட்டும் சுமார் 12,000 ஊழியர்கள் தங்களுடைய வேலை இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் மொத்தம் 30,000 பேருக்கு மேல் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளர்.
அதில் இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட 12000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்தியாவின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையும் 30000 ஆக உள்ளது மூலம் ஒரே நாளில் சுமார் 40 சதவீத ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்தியா, Oracle நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பணியாளர் கொண்ட நாடாகவும், அமெரிக்காவுக்கு வெளியே மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையமாகவும் உள்ளது.
ஆரக்கிள் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு துறையில் 300-360 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் ஆண்டுதோறும் 50 பில்லியன் டாலர் அளவிலான மூலதனம் தேவை, இதேபோல் 100 பில்லியன் டாலக் கடன் சுமையும் ஏற்கனவே உருவாகியுள்ளது. இதனால், நிறுவனத்தின் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பணிநீக்கங்கள் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.
ஆரக்கில் நிறுவனம் தற்போது கையில் எடுத்துள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் சுமார் 2.1 பில்லியன் டாலர் தொகையை சேமிக்க உள்ளது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications