போச்சு.. ஒரே நாளில் வீட்டுக்கு கிளம்பும் அரசு ஊழியர்கள்! மொத்தமாக இத்தனை பேரா? என்ன காரணம் தெரியுமா?
சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 8,144 பேர் இன்று ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர். இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் இத்தனை பேர் ஓய்வு பெறுவது அதிக எண்ணிக்கையாக இருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் மட்டும் 30 பேர் இன்று ஓய்வு பெறுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றும் 18 பேர் இன்று ஓய்வு பெறுகின்றனர்.
தமிழ்நாடு அரசின் கீழ் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் மற்றும் பணிகள் செய்வதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தலைமைச் செயலர் தொடங்கி, ஆபீஸ் அசிஸ்டன்ட் வரை பல்வேறு துறை ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். பணியில் சேர்ந்த நாளிலிருந்து கணக்கிடப்பட்டு அதே மாதத்தில் ஓய்வு பெறுவது வழக்கம் தற்போது தமிழக அரசின் துறைகளில் தற்போதைய நிலையில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58-ல் இருந்து 60 ஆக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்டது. அதன்படி தற்போது மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகும். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் தாங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்று வருவார்கள். குறிப்பாக மே மாதங்களில் தான் அதிகம் பேர் ஓய்வு பெறுவார்கள்.
அதற்கு முக்கிய காரணம், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அந்த முழு ஆண்டு முடிவு பெறும்போது மே மாதங்களில் தான் ஓய்வு பெறுவார்கள். அந்த அடிப்படையில் மே மாதம் 31-ந் தேதி இன்றுடன், ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்து 144 பேர் ஓய்வு பெறுகின்றனர். அதாவது மாநில அரசின் குரூப்-ஏ பணியிடங்களில் 424 பேரும், பி பணியிடங்களில் 4 ஆயிரத்து 399 பேரும், சி பணியிடங்களில் 2 ஆயிரத்து 185 பேரும், குரூப்-டி பணியிடங்களில் 1,136 பேரும் ஓய்வு பெறுகிறார்கள்.
கல்லூரி பேராசிரியர்களை பொறுத்தவரை ஏ பிரிவிலும், ஆசிரியர்களை பொறுத்தவரை பி பிரிவு ஊழியர்களாக இருப்பார்கள். இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை மொத்த அரசு ஊழியர்களில் 0.86 சதவீதம் ஆகும். சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் 30 பேர் வரை இன்று ஓய்வு பெறுகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 பேர் ஓய்வு பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் காவல்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் 18 பேர் ஓய்வு பெறுகின்றனர்.
ஏற்கனவே தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் ஏறக்குறைய சுமார் ஒரு சதவீதம் அரசு ஊழியர்கள் இன்று ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 8000 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவது குறிப்பாக தலைமைச் செயலகத்தில் மட்டும் 30 பேர் வரை ஓய்வு பெறும் நிலையில் காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications