Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாஜிக்கே இல்லை! லோக்சபா எண்ணிக்கையை உயர்த்தினால் தென் மாநிலங்களுக்கே பாதிப்பு.! கொந்தளித்த சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா எண்ணிக்கையைத் தொகுதி மறுசீரமைப்பு மூலம் 543இல் இருந்து 816ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே இந்த திட்டத்திற்குக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது அதிக மக்கள் தொகையுள்ள மாநிலங்களுக்கும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை மேலும் தீவிரப்படுத்தும் என விமர்சித்தார்.

நமது நாட்டில் முக்கியமான முடிவுகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படுவது அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்றத்தில் கீழ் அவையாகக் கருதப்படும் லோக்சபாவில் இப்போது எம்பிக்கள் எண்ணிக்கை 543ஆக உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு மூலம் இந்த நம்பரை 816ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

P Chidambaram Opposes delimitation Lok Sabha Expansion To 816 Seats will affect southern states

லோக்சபா இடங்கள்

இருப்பினும், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை இப்படி 543ல் இருந்து 816ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்குக் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ப. சிதம்பரம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த உயர்வு லோக்சபாவை நிர்வகிக்கக் கடினமானதாக மாற்று என்றும், ஒவ்வொரு எம்.பி.க்கும் பேசுவதற்கான வாய்ப்புகளையும், நேரத்தையும் வெகுவாகக் குறைக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசுத் திட்டம்

தமிழ்நாடு, கேரளா சட்டசபைத் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், இந்த பரபரப்பான சூழலில் ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றக் கூட்டத் தொடரைக் கூட்டி தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டிருப்பதையும் சிதம்பரம் விமர்சித்தார். இந்த திட்டத்தை அனைவரும் எதிர்க்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்றும் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 அன்றும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ள சூழலில், இந்த காலகட்டத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டி நடத்தினால் அதில் அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்ள முடியாது என்றும் அவர் விளக்கினார்.

ப சிதம்பரம்

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "மக்களவையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.க்களும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 28 எம்.பி.க்களும் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளனர். ஏப்ரல் 16 முதல் 18 வரையிலான நாட்களில் அவர்கள் தங்கள் தொகுதிகளின் தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் முக்கியமான அரசியலமைப்புத் திருத்த மசோதாக்கள் விவாதித்து வாக்களிப்பிற்குக் கொண்டு வரப்பட்டால், இந்த 67 எம்பிக்களால் எப்படிப் பங்கேற்க முடியும்? திட்டமிட்டு அவர்களைப் புறக்கணிக்கவே சரியாக இந்த காலகட்டத்தில் இந்த மசோதாவை அவர்கள் கொண்டு வந்துள்ளனர் என நான் சந்தேகிக்கிறேன்" என்றார்

அவசரம் ஏன்

ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தை இவ்வளவு அவசரமாகக் கூட்ட என்ன அவசியம்? சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு, ஏப்ரல் 29ஆம் தேதி ஏன் கூட்ட முடியாது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மசோதாக்களின் வரைவுகள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்பதால் அதில் என்ன இருக்கிறது என்பது குறித்து தன்னால் பேச முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், கேரளாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, மசோதாக்களில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு புரிதலை வழங்குவதாக ப. சிதம்பரம் தெரிவித்தார்.

தென் மாநிலங்கள்

அவர் மேலும் கூறுகையில், "மக்களவையின் பலத்தை 543ல் இருந்து 816 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவு பிற்போக்கானது. இது அதிக மக்கள் தொகையுள்ள மாநிலங்களுக்கும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை மேலும் தீவிரப்படுத்தும்.

மகளிர்க்கான மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையிலேயே சாதிக்க முடியும்.. 816 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சில நிமிடங்கள் மட்டுமே பேச வாய்ப்பு கிடைத்தால், அவரால் என்ன சொல்ல முடியும்? என்ன மாதிரியான ஆக்கப்பூர்வ விவாதத்தை நடத்த முடியும்" என அவர் கேள்வி எழுப்பினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+