சிபிஎம்-ன் புதிய மாநிலச் செயலாளராக 'வாச்சாத்தி நாயகன்' பெ. சண்முகம் தேர்வு! கே.பாலகிருஷ்ணன் மாற்றம்!
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் கட்சியின் (சிபிஎம்) கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற சிபிஎம் மாநாட்டில் 80 பேர் கொண்ட மாநிலக் குழு கூட்டத்தில் தற்போது மத்திய குழு உறுப்பினராக உள்ள பெ.சண்முகம், தமிழ்நாட்டுக்கான மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநிலச் செயலாளராக இருந்த கே.பாலகிருஷ்ணன் 72 வயதாகிறது என்பதால் தம்மை பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என இம்மாநாட்டில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சிபிஎம் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் உள்ளிட்டவற்றின் தலைவர்களும் பங்கேற்றனர். விழுப்புரத்தை அதிரவைத்த செம்படைப் பேரணியும் நடைபெற்றது.

விழுப்புரம் மாநாட்டில் மத்திய பாஜக அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பாசிச அரசியலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் விழுப்புரம் மாநாட்டில் இன்று பேசிய கே.பாலகிருஷ்ணன், தமக்கு அடுத்த மாதம் 72 வயதாகிறது; ஆகையால் தம்மை மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும். கட்சியின் விதிகளின் படி 72 வயதாகிறவர்கள் கட்சிப் பதவிகளில் இருக்கக் கூடாது; ஆகையால் எனக்கு கட்சிப் பதவி வேண்டாம் என அறிவித்திருந்தார்.
இதனையடுத்து சிபிஎம் கட்சியின் 80 பேர் கொண்ட மாநில நிர்வாகக் குழு கூடி விவாதித்தது. அப்போது சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பெ.சண்முகம், புதிய மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது சிபிஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருக்கிறார் பெ. சண்முகம். மாணவப் பருவம் முதலே இடதுசாரி இயக்கத்தில் இணைந்து பயணிப்பவர். மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்டவற்றை முன்னெடுத்து நடத்தியவர். வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்காக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தியவர் பெ. சண்முகம்.
-
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications