சட்டமும், ஜனநாயகமும் ஒரு சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்.. அயோத்தி தீர்ப்பு குறித்து பா.ரஞ்சித்!
சென்னை: சட்டமும், ஜனநாயகமும் ஒரு சார்புடையதாக மாறிக்கொண்டே போனால், சட்டத்தின் முன் எப்படி எல்லாரும் சமம் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. இதன்படி அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒப்படைக்க உத்தரவிட்டது.

அதற்கு பதிலாக முஸ்லீம்களுக்கு 5 ஏக்கர் நிலம் அயோத்தியிலேயே மசூதி கட்ட வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதேநேரம் சிலர் சட்டத்தின்படியும், ஆதாரத்தின்படியும் தீர்ப்பு வழங்காமல் நம்பிக்கையின்பேரில் தீர்ப்பு வழங்கியிருப்பதாக கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்... தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்... “சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???”
— pa.ranjith (@beemji) November 10, 2019
இயக்குநர் பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பதிவில், "ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்... தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்... "சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications