விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை!
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு சென்னையில் 2வது பெரிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என திமுக அரசு திட்டமிட்டு பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலைய அமைக்க முடிவு செய்தது. இது இன்றைய வேகமாக வர்த்தகம் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும் என கணித்து திட்டப்பணிகள் துவங்கப்பட்டது.
ஆனால் இத்திட்டத்தை விஜய் தலைமையிலான அரசு மறு ஆய்வு செய்வதாக அறிவித்துள்ளது, மேலும் தற்போது இப்பகுதியில் கைப்பற்றப்பட்ட 1700 ஏக்கர் நிலைத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியானது. இதைவிட பெரிய பிரச்சனை தற்போது ஆந்திர பிரதேசம் சந்திரபாபு நாயடு அரசு வாயிலாக வருகிறது.

9 விமான நிலையங்கள்
ஆந்திரப் பிரதேச அரசு அம்மாநிலத்தில் 9 புதிய விமான நிலையங்களை கட்டவும், மேம்படுத்தவும் முடிவு செய்து இதற்காக 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை ஒதுக்கியுள்ளது. இதில் ஒரு விமான நிலையும் ஓசூர் மற்றும் ஆந்திர பிரதேசத்தின் முக்கிய தொழிற் பகுதியாக இருக்கும் ஸ்ரீசிட்டி அருகில் குப்பம் பகுதியில் அமைக்க சந்திரபாபு நாயடு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய விமான நிலைய வாய்ப்பு முழுமையாக இழக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்தியாவின் மிகவும் நகர்மயமாக்கப்பட்ட மாநிலமான தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்ட மற்றும் பெரிய அளவிலான விமானப் போக்குவரத்து தேவை என்ற கருத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய சிக்கல் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது.
ஆந்திர அரசின் குப்பம் விமான நிலையத் திட்டம்
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, ஒசூர் மற்றும் ஸ்ரீ சிட்டி போன்ற பகுதிகளுக்கு அருகிலும், சென்னைக்கு வெறும் 3 மணிநேர பயண தூரத்தில் உள்ள குப்பம் பகுதியில் புதிய விமான நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்த இடம் தமிழ்நாட்டின் பரந்தூர் திட்டத்துக்கும், ஓசூர் விமான நிலையத்திற்கும் நேரடி போட்டியாக அமையக்கூடியது. குப்பம் விமான நிலையம் உருவானால், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பயணிகள் எளிதாக அங்கு சென்று வர வாய்ப்பு ஏற்படும். இதனால் தமிழ்நாட்டில் பெரிய அளவிலான எதிர்கால விமான நிலையத் திட்டம் பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இதற்கு ஓசூர் விமான நிலைய பிரச்சனை ஒரு முக்கிய பாடமாக உள்ளது.
ஓசூர் மற்றும் பெங்களூரு விமான நிலைய பிரச்சனை
ஓசூர் பகுதியில் இருந்து பெங்களூருவின் கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்துக்கு இடையே உள்ள தொலைவு சுமார் 76 கிலோமீட்டர் முதல் 100 கிலோமீட்டர் வரை இருக்கிறது. இந்த குறுதிய இடைவெளி தான் ஓசூர் புதிய விமான நிலையம் கட்டுவதற்கு பெரிய தடை ஒன்று உள்ளது.
பெங்களூரு விமான நிலைய நிறுவனத்துடன் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, பெங்களூரு விமான நிலையத்துக்கு 150 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட விமான நிலையம் அமைக்க முடியாது என்ற தடை உள்ளது. இந்த தடை காரணமாக ஓசூர் பகுதியில் எளிதாக விமான நிலையம் கட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது.
பரந்தூர் மற்றும் குப்பத்துக்கு இடையேயான தொலைவு
இந்த நிலையில் பரந்தூர் மற்றும் குப்பம் இடையே சாலை வழியாக சுமார் 194 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. ஆனால் விமானப் பாதையில் இந்த தொலைவு குறைவாக இருக்கும்.
இதேபோல் ஓசூர் மற்றும் குப்பம் இடையே சாலை வழியாக வெறும் 87.5 கிலோமீட்டர் மட்டுமே உள்ளது.
இதனால் குப்பம் விமான நிலையம் உருவானால், சென்னை பகுதி பயணிகளுக்கு அது மாற்று விருப்பமாக மாறலாம். தமிழ்நாட்டின் பரந்தூர் திட்டம் தாமதமானால், இந்த போட்டி தமிழ்நாட்டின் வாய்ப்பை முழுவதுமாக பாதிக்கக்கூடும். இந்தியாவில் விமானப் போக்குவரத்து வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இத்தகைய போட்டி தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 2031 ஆம் ஆண்டுக்குள் முடிக்க தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்க வேண்டும். இல்லையெனில், பெரிய அளவிலான எதிர்கால வளர்ச்சி வாய்ப்பு முழுவதுமாக இழக்கப்படலாம்.
-
சாதனையா? வேதனையா? விஜய் முதல்வராகி 30 நாள்! அதிரடி ஆக்ஷன்களும்.. அரசின் முன் நிற்கும் சவால்களும்! -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன் -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
டெல்லி புறப்பட்டார் விஜய்! நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
சிக்கும் செந்தில் பாலாஜி? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தோண்டப்படும் டாஸ்மாக் முறைகேடு! -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications