ஏர்போர்ட் கட்டத்தானே நிலம் கொடுத்தோம்.. என்ன கொடுமை இது.. விஜய்க்கு எதிராக திரளும் பரந்தூர் மக்கள்
சென்னை: சென்னை அருகே பரந்தூரில் ரூ.27,400 கோடி மதிப்பில் உலகத் தரத்திலான பசுமை விமான நிலையம் (Greenfield Airport) அமைக்கும் திட்டம் தற்போது சிக்கலில் மாட்டி உள்ளது. நிலம் கொடுத்த விவசாயிகளும் உள்ளூர் மக்களும் தங்கள் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் பெரும் தவிப்பில் உள்ளனர். புதிதாக ஆட்சிக்கு வந்த விஜய் தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை கைவிடும் என்கிற தகவல்கள் பரவி வரும் நிலையில், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தில் SIPCOT தொழிற்பூங்கா அமைக்கும் யோசனை முன்னுக்கு வருவதாக வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2022-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு 2025 ஏப்ரலில் இறுதி ஒப்புதல் கிடைத்தது. அதன்பின் வேகமாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நாகப்பட்டு, நெல்வாய், குணகரம்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து சுமார் 1,700 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், தேர்தல் பிறகு பணிகள் முழுவதும் மந்த நிலையில் உள்ளன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

நாகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.. தனது விளைநிலத்தை திட்டத்திற்காக கொடுத்தவர். "மாநில வளர்ச்சிக்காகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதாலும் மனமில்லாமல் நிலத்தை விட்டுக்கொடுத்தேன். இழப்பீடும் கிடைத்தது. ஆனால் இத்தனை மாதங்கள் ஆகியும் ஒரு வேலையும் நடக்கவில்லை. எங்களின் எதிர்காலம் என்னவென்றே தெரியவில்லை," என்கிறார் வருத்தத்துடன்.
மற்றொரு விவசாயி சிவப்பிரகாசம் (நெல்வாய்) தனது 5 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார். அரசு சிறுவள்ளூரை மாற்று இடமாக அறிவித்தாலும், காரை கிராமத்தை ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கிறார். "காரை பகுதியில் போக்குவரத்து வசதி அதிகம். வேலைவாய்ப்பும் எளிது. மேலும், வாழ்வாதாரம் சீரடையும் வரை மாதந்தோறும் நிதியுதவி வழங்க வேண்டும்," என்கிறார்.
கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட முடங்கியுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நாகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இன்னொருவர், "சாக்கடை கசிவு, தெருவிளக்கு பழுது என்று புகார் கொடுத்தாலும் அதிகாரிகள் வருவதில்லை. 'நீங்கள் எப்படியும் இடம் மாறப்போகிறீர்கள்' என்கிறார்கள். இது எங்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்குகிறது," என்கிறார்.
இடமாற்றக் குழப்பம் காரணமாக பலரின் தனிப்பட்ட திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சங்கீதா என்ற பெண், "புதிய வீடு கட்ட திட்டமிட்டோம். ஆனால் கட்டிட அனுமதி கிடைக்கவில்லை. எல்லாம் நிச்சயமின்மை காரணமாகத் தான்," என்கிறார்.
இன்னொரு விவசாயி "வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்," என வலியுறுத்துகிறார்.
முருகன் மேலும் கூறுகையில், "விமான நிலையம் என்று சொல்லி நிலம் வாங்கி, பின்னர் SIPCOT-ஆக்கினால் தீவிரமாக எதிர்ப்போம். அப்படி செய்யக் கூடாது," என எச்சரிக்கிறார்.
எனினும், சிலர் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர். பெங்களூருவில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பெண் ஒருவர், "பெங்களூரு போல இங்கும் வளர்ச்சி வர வேண்டும். கூடுதல் இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் தேவை," என்கிறார்.
பரந்தூர் பகுதி மக்கள் அனைவரும் ஒரே குரலில், "அரசு உடனடியாக தெளிவான அறிவிப்பை வெளியிட்டு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என வலியுறுத்துகின்றனர். விமான நிலையத் திட்டம் தொடருமா அல்லது SIPCOT-ஆக மாறுமா என்பதை அரசு விரைவில் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications